போதையில் தவறு செய்த அம்பயர்: தென் ஆப்ரிக்கா அதிரடி புகார்
டர்பன்: டர்பன் டெஸ்ட் போட்டியின் போது, அம்பயர் ஸ்டீவ் டேவிஸ், மது அருந்தியிருந்ததாக தென் ஆப்ரிக்க வீரர்கள் புகார் கூறியுள்ளனர். போதையில் தள்ளாடிய இவர் முக்கியமான கட்டத்தில், தங்களுக்கு எதிராக தவறான தீர்ப்பு அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
பொறியியல் படிப்பில் 2 லட்சம் இடங்கள் அதிகரிப்பு –
இந்தியாவில் பொறியியல் படிப்புகளில் ஏறக்குறைய 2 லட்சம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதல் கிளை திறந்தது ‘கேர்போர்’!
டெல்லி: சில்லறை வணிகத்தில் சர்வதேச அளவில் முக்கிய இடம் வகிக்கும் கேர்போர் நிறுவனம் தனது முதல் கிளையை டெல்லியில் தொடங்கியது.
இந்தியாவுக்கு ஆயுத சப்ளை : அமெரிக்க கம்பெனிகள் போட்டி
வாஷிங்டன் : இந்தியாவுக்கு ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை சப்ளை செய்ய அமெரிக்க கம்பெனிகள் போட்டி போடுகின்றன.
பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக இருக்கும்: மீரா குமார் நம்பிக்கை
புதுடில்லி : “எந்தவிதமான சிக்கலும் இன்றி, பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்கும்’ என, சபாநாயகர் மீரா குமார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
வீடு தேடிவரும் தமிழக அரசின் உதவித் தொகை
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை கண்டறிந்து, வீடுகளுக்கே விண்ணப்பங்களை அனுப்பி, உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! கோத்தாபயவுக்கு இந்தியா வருமாறு இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் அழைப்பு
இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் மேலதிக பயிற்சிகளை வழங்குவதற்கு இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் இணக்கம் தெரிவித்துள்ளார்.
வருகிறது தமிழக சட்டசபை தேர்தல் :சென்னை வந்தார் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி
சென்னை: தமிழக சட்டசபை காலம் முடிவதையொட்டி வரும் மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய சட்டசபை உருவாக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருப்பதால் தேர்தலுக்கான முன்னற்பாடுகள் பணி துவங்கி வேகமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் அரசு வேலைக்காக 62 லட்சம் பேர் காத்திருப்பு: அரசு புள்ளி விவரத்தில் தகவல்
சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 62 லட்சம் பேர், தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.
இந்தியா அசத்தல் வெற்றி!* டெஸ்ட் தொடரில் சமநிலை* ஸ்ரீசாந்த், ஜாகிர் அபாரம்
டர்பன்: டர்பன் டெஸ்டில் ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் சாதித்துக் காட்டினர். இவர்களது வேகத்தில் அதிர்ந்து போன தென் ஆப்ரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதையடுத்து டர்பன் மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா, டெஸ்ட் தொடரில் 1-1 என சமநிலையை எட்டியது.