இந்திய தூதர்களை உளவு பார்க்க உத்தரவிட்ட ஹில்லாரி-விக்கிலீக்ஸ்
வாஷிங்டன் ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அதுதொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் குண்டைப் போட்டுள்ளது.
ராடியாவின் தொலைபேசி பேச்சு கசிவு-சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார் டாடா
டெல்லி: நீரா ராடியாவுடன் தான் பேசியது மீடியாக்களில் கசிந்ததற்கு டாடா குழும தலைவர் ரத்தன் டாடா கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். இதை தடுத்து நிறுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டை அவர் அணுகவுள்ளார்.
அலறுகிறது அமெரிக்கா ; இரண்டரை லட்சம் ரகசிய ஆவணங்கள் விக்கிலீக் வெளியீடு
நியூயார்க்: அமெரிக்காவின் அந்தரங்க ரகசியங்களை கண்காணித்து இந்த நாட்டின் உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட விஷயங்கள் என்ன, என்ன என்பதை விலாவாரியா புட்டு, புட்டு வைத்திருக்கிறது.
சச்சின், தோனிக்கு ரூ. 1.84 கோடி: ஐ.பி.எல்., ஏலத்தில் விலை நிர்ணயம்
புதுடில்லி : நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஏலத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சச்சின், தோனி, சேவக் போன்றவர்களுக்கு 1.84 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர். இந்த ஏலத்தில் 62 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மறைவாக உள்ள பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்!-வைகோ
சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தற்போது மறைவாக உள்ளார். அவர் நிச்சயம் விரைவில் வெளிப்படுவார். தமிழீழம் மலரும், என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
இந்தியாவின் 20வது அணு உலையாக கைகா இயங்கத் தொடங்கியது
கைகா (கர்நாடகா): இந்தியாவின் 20வது அணு உலையாக, கர்நாடக மாநிலத்தின் கைகாவில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை இயங்கத் தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின் அணு மின்சார சக்தி 4780 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
பகுதிநேர பி.இ., பி.டெக்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் அறிவிப்பு
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பகுதி நேர பி.இ., – பி.டெக்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், டிச. 7 முதல் 10ம் தேதி வரை நடக்கிறது.
தென்கொரியா – அமெரிக்கா கூட்டுப் பயிற்சி: பதட்டம் அதிகரிப்பு:தடுக்க சீனா முயற்சி
இயான்பியாங்:தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியை திட்டமிட்டபடி நேற்று துவக்கியதை அடுத்து, வடகொரியா மஞ்சள் கடல் எல்லையில் உள்ள தன் ஏவுதளங்களில் இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளைத் தயாராக வைத்துள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பரிசீலனை-மீண்டும் டிஜிபியாக லத்திகா சரண் நியமனம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி புதிய டிஜிபி குறித்து பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது மீண்டும் லத்திகா சரணையே டிஜிபியாக நியமித்துள்ளது.
கூட்டணியை துண்டிக்க நினைத்தால் காங்கிரசுக்கே நஷ்டம்: கருணாநிதி
வேலூர் : “தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் துண்டிக்க நினைத்தால், அவர்களுக்கே நஷ்டம்’ என, வேலூர் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசினார்.