ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமருக்கு தொடர்பா? : பார்லியில் விளக்கம் அளிக்க பா.ஜ., வலியுறுத்தல்
புதுடில்லி : “ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இதுகுறித்து, பார்லிமென்டில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என, பா.ஜ., கூறியுள்ளது.
சென்னையில் ரூ.100 கோடியில் சித்த மருந்து ஆய்வகம்
சென்னை: சென்னை, தாம்பரத்தில் 100 கோடி ரூபாயில் சித்த மருந்து ஆய்வகம் அமைக்க, இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய அமைப்பு, ‘ஆயுஷ்’ முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால்தான் தோல்வி-டோணி விளக்கம்
நாட்டிங்காம்: தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதாலும், முன்னணி வீரர்கள் காயமடைந்திருப்பதாலும் அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு முயற்சிகளை துவக்குமா?
நியூயார்க்:ஐ.நா., பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை நேற்று இந்தியா ஏற்றுக்கொண்டது. ஒரு மாத காலம் இந்த தலைமை பொறுப்பு இந்தியா வசமிருக்கும்.
அனுமதியின்றி தி.மு.க., ஆர்ப்பாட்டம் : தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பேர் கை
சென்னை : தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவதைக் கண்டித்து, தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர்.
சமச்சீர் கல்வி விவகார வழக்கு : தமிழக சட்டத் திருத்தம் தேவையற்றது
புதுடில்லி: “சமச்சீர் கல்வி அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் தேவையற்றது. இதனால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன’ என, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஒப்புக் கொண்டார்.
தீபாவளிக்கு தென்மாவட்ட ரயில்கள் “ஹவுஸ் புல்’ : சிறப்பு ரயில்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்
சென்னை : தீபாவளிக்காக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும், முன்பதிவு முடிந்து விட்டது.
ரூ.2014கோடிக்கு யுடிவி.யை வாங்கிய வால்ட் டிஸ்னி!
தமிழ் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பொழுதுபோக்கு துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் முக்கிய நிறுவனமான யுடிவி-யை ரூ.2014 கோடிக்கு வால்ட் டிஸ்னி நிறுவனம் வாங்கியுள்ளது.
நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து: அரசு உத்தரவு
கட்டாய கல்வி சட்டம் காரணமாக, நடப்பாண்டு முதல் நேரடி 8ம் வகுப்பு தனிதேர்வு திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க கடன் நெருக்கடியால் உலக பொருளாதாரம் பாதிக்கும் : ஐ.எம்.எப்., தலைவர் எச்சரிக்கை
வாஷிங்டன்: “அமெரிக்காவின் கடன் நெருக்கடியைத் தீர்க்க விரைவில் ஒரு முடிவு எடுக்காவிட்டால், உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்’ என, சர்வதேச நிதியமைப்பின் (ஐ.எம்.எப்.,) தலைவர் கிறிஸ்டைன் லகார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.