யற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் நிறுவனங்களுக்கு பாதிப்பு
கொச்சி: இந்தியாவிலும், சர்வதேச சந்தையிலும் இயற்கை ரப்பர் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ரப்பர் இறக்குமதியும் சரிவடைந்துள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
கோவை : பிளஸ் 2 தேர்வில், 60 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
ஆப்கனில் விமானம் நொறுங்கி 40 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் பயணிகள் சென்ற விமானம் ஒன்று வானில் வெடித்து சிதறியது . இதில் இருந்த 40 பயணிகள் இறந்து விட்டதாக அந்நாட்டு உள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம்: முதல்வர் கருணாநிதி
சென்னை, மே 16: இளைஞர்கள் நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
கல்பாக்கம் வேக ஈணுலையில் வெப்பத் தணிப்பான் பொருத்தம் : விஞ்ஞானிகள், இன்ஜினியர்கள் சாதனை
சென்னை: கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் முன்மாதிரி வேக ஈணுலையில், பிரமாண்டமான வெப்பத் தணிப்பான் நேற்று பொருத்தப்பட்டது.
ஏறுமுகத்தில் விதை மஞ்சள் விலை
பொங்கலூர்: மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால், விதை மஞ்சளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. பொங்கலூர் சுற்றுவட் டார பகுதியில், பி.ஏ.பி., பாசனம் பெறும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்: மாணவர்களுக்கு திருப்பி தர ஐகோர்ட் தடை
சென்னை:தனியார் பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பித் தர, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஸ்ரீகணேஷ் பொறியியல் கல்லூரி தாக்கல் செய்த மனு:
ஒரு லட்சம் கோவில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அமைச்சர் அறிவிப்பு
சென்னை: ‘திருத்திய ஊதிய நிர்ணயக் குழுவின் பரிந்துரையின்படி, ஒரு லட்சம் கோவில் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்’ என, அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். சட்டசபையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட அறிவிப்புகள்:
புற்றுநோய் போல பயங்கரவாதம்: பாகிஸ்தான் நாட்டிற்கு ஆபத்து
வாஷிங்டன்: புற்றுநோய் போல் பரவி வரும் பயங்கரவாதத்தால், பாகிஸ்தானின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு ; தூத்துக்குடி மாணவன் முதலிடம் ; 2 வது இடம் 3 பேர் – 3 வது இடம் 5 பேர் பிடித்து சாதனை !
சென்னை: மாநிலம் முழுவதும் மாணவ- மாணவிகள் எதிர்பார்த்த பிளஸ் 2 ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. 1187 மார்க்குகள் பெற்று தூத்துக்குடி சக்தி விநாயகர்இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பாண்டியன் என்ற மாணவன் 1187 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.