பெட்ரோல், டீசல் விலை தலா ரூ. 6 அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா ஆறு ரூபாய் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்த பின் வெளியாகும்.
ஜார்க்கண்டில் வளர்ச்சி இல்லை :இதுவரை 7 முதல்வர்கள்: இனி.
ராஞ்சி : ஜார்க்கண்டில் நிலையற்ற அரசியல் காரணங்களால், அடிக்கடி ஆட்சி மாறுவதால், வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதோடு, தொழில் துறையும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் அமெரிக்க பொருளாதாரம்
வாஷிங்டன்: 2010ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அமெரிக்க பொருளாதாரம் 3.2 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6,332 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நான்கு நாள் சான்றிதழ் சரிபார்த்தல் நடக்கிறது
சென்னை:’வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 6,332 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தேசிய ஒருமைப்பாடு ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது: முதல்வர் கருணாநிதி பேச்சு
தேசிய ஒருமைப்பாடு என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலங்களும், அண்டை மாநிலங்களுக்கு சகோதர மனப்பான்மையுடன் உதவ வேண்டும்.
கசாப் வழக்கில் இன்று தீர்ப்பு: மும்பை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு
மும்பை, மே 2: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் கைதான அஜ்மல் கசாப் மீதான வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாகிறது.
பிரபாகரன் கொல்லப்பட்ட நாள் மே 18-ல் வெற்றி ஊர்வலம்: கோத்தபய
கொழும்பு, மே 2: விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதை கொண்டாடும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே 18-ம் தேதி கொழும்பில் வெற்றி ஊர்வலம் நடத்தப்படும் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச அறிவித்தார்.
இளம் விஞ்ஞானிகளாகும் கிராமப்புற மாணவர்கள்
ஓமலூர்.ஏப்.28: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக மாற்றுவதற்காக 20 நாள் அடிப்படை அறிவியல் பயிற்சி முகாம் மே 3-ந்தேதி தொடங்குகிறது.
ஈரோடு ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் ரூ.31 கோடிக்கு மஞ்சள் விற்று சாதனை
ஈரோடு: ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம், 2010 ஜன., 1 முதல் நேற்று வரை, 31 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 455 ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் : கபில் சிபல் தகவல்
புதுடில்லி : நாடு முழுவதும் அங்கீகாரம் பெறாத 200 கல்வி நிறுவனங்களும், 21 போலி பல்கலைக்கழகங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக, பார்லிமென்டில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.