அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் !
புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பெண் அதிகாரி அந்த நாட்டுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். காசு ஆசை மற்றும் அந்நாட்டு அதிகாரியிடம் காதல் கொண்டதால் தன்னை மறந்து இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்த பெண் அதிகாரி கூறியுள்ளார்.
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் அய்மி உலகிலேயே கவர்ச்சிகரமான வீராங்கனையாக தேர்வு
ஆக்லாந்து: நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அய்மி வாட்கின்ஸ், உலகிலேயே கவர்ச்சிகரமான வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருமண வரவேற்பு அழைப்பிதழை விற்றதாக சோயப் மாலிக் மீது வழக்கு!
லாகூர்: திருமண வரவேற்பு அழைப்பிதழை விற்றதாக பாகிஸ்தான் [^] கிரிக்கெட் [^] வீரர் சோயப் மாலிக் மீது பாகிஸ்தான் கோர்ட்டில் வழக்கு [^] தொடரப்பட்டுள்ளது.
8 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு 17.5 சதவீத சம்பள உயர்வு
மும்பை : பொதுத் துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு 17.5 சதவீத சம்பள உயர்வு அளிக்க, வங்கி நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இதன் மூலம், எட்டு லட்சம் வங்கி ஊழியர்கள் பலனடைவர்.
ஐ.எஸ்.ஐ.க்கு ரகசிய தகவல்களை கடத்தினார்: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இந்திய தூதரக பெண் அதிகாரி கைது; `ரா’ உயர் அதிகாரி மீதும் கண்காணிப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வருபவர் மாதுரி குப்தா (வயது 53). இவர் அங்கு இரண்டாம் செயலாளர் மட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
ஒட்டுக் கேட்பது காங்., வழக்கம்; சந்திரபாபு நாயுடு கண்டனம்
ஐதராபாத்:முக்கிய தலைவர்களின் தொலைபேசி பேச்சை ஒட்டுக் கேட்டது தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார்.
சமச்சீர் கல்வி இதர மொழிகளுக்கு எதிரானதல்ல: தங்கம் தென்னரசு
சென்னை:”சிறுபான்மை மற்றும் இதர மொழிகளுக்கு சமச்சீர் கல்வி எதிரானது அல்ல. நான்காம் தொகுப் பில் எந்த மொழியையும் படிக்க தடையில்லை,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப் சிலியில்!
அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய டெலஸ்கோப் அமைக்கப்பட உள்ளது. இது ரூ.5 ஆயிரம் கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை : எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., படிப்புகளுக்கான, ‘டான்செட்’ நுழைவுத் தேர்வெழுத, ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஐகோர்ட்டை கலவரபூமி ஆக்கினால் மக்கள்மன்னிக்க மாட்டார்கள்: முதல்வர் பேச்சு
சென்னை:’ஐகோர்ட்டை கலவர பூமியாக ஆக்குகின்றவர்கள் யாராக இருந்தாலும், பொதுமக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்’ என, முதல்வர் கருணாநிதி பேசினார்.