மூன்றாவது தலைமுறையிலும் பட்டா கிடைக்காமல் தவிக்கும் 3000 குடும்பங்கள்
புதுக்கோட்டை, ஏப். 20: புதுக்கோட்டை, காமராஜர்புரத்தில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் ஏறத்தாழ 3 ஆயிரம் குடும்பங்கள் பட்டா கிடைக்காமல் தவித்து வருகின்றன.
இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் ராக்கெட் வீச்சு!
பதன்கோட், ஏப்.19: பஞ்சாப் மாநிலத்தில் எல்லையையொட்டிய பகுதியில் உள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை நிலைகள் மீது திங்கள்கிழமை அதிகாலை அத்துமீறி 3 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் பாகிஸ்தான் படையினர்.
ஒசாமா பின்லாடன் பேஸ்புக் பக்கம் நீக்கம் ; அமெரிக்க நிறுவனம் அதிரடி முடிவு
நியூயார்க்: உலக அளவில் பிரபலம் அடைந்து வரும் பேஸ்புக்கில் சேர்க்கப்பட்டிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் அக்கவுன்டை நீக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்வெட்டு ஏற்படுத்திய ஆட்சியின்’பவரை’ பறியுங்கள்: ஜெ., ஆவேசம்
கடலூர் : ‘மின்வெட்டு செய்து வரும் தி.மு.க., அரசின், ‘பவரை’ நீங்கள் பறிக்க வேண்டும்’ என, ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.
உலகின் சிறந்த 50 இன்நோவேட்டிவ் நிறுவனங்களில் டாடா, ரிலையன்ஸ்
நியூயார்க்: உலகின் சிறந்த 50 இன்நோவேட்டிவ் நிறுவனங்களில் இந்தியாவின் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. புதுமைகளை புகுந்துவதில் உலகின் சிறந்த 50 நிறுவனங்கள் குறித்த கணக்கெடுப்பு எடுக்கப் பட்டது.
சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வசதியில்லை ‘மிஸ்டர் தமிழ்நாடு’க்கு வந்த சோதனை
ஊட்டி:மிஸ்டர் தமிழ்நாடு 2010′ போட்டியில்வென்ற இளைஞர், வசதியில்லாத காரணத்தால், தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இரவில் விளக்கு போடாதீர்: புற்று நோய் வரலாம்
லண்டன்:இரவு நேரங்களில் திடீரென விளக்கை எரிய விடுபவர்களா நீங்கள்? அப்படியானால், இனி அவ்விதம் செய்ய வேண்டாம். இரவில் விளக் கெரிந்தால் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வெளிநாட்டினர் கல்வி கற்க தமிழகம் வரும் நிலை: ஸ்டாலின்
காஞ்சிபுரம்:முன்பு தரமான கல்வி கற்க வெளிநாடு சென்று படிக்கும் நிலை இருந்தது. இன்று வெளிநாட்டினர் கல்வி கற்க தமிழகம் வருகின்றனர் என, துணை முதல் வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவாரூர் மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை உறுதி
திருவாரூர்:திருவாரூரில் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.திருவாரூரில் 100 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் தூசியால் 6 மாதத்திற்கு விமான போக்குவரத்து பாதிக்கும்?
பிரேசிலியா: ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை தொடர்ந்து குமுறி வந்தால் அடுத்த ஆறு மாத்த்திற்கு விமான போக்குவரத்தை நினைத்துப் பார்க்க முடியாது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.