பிளஸ் 2 இயற்பியலில் 262 மாணவர்களுக்கு மறு தேர்வு: தேர்வுத்துறை முடிவு
சென்னை : ‘பிளஸ் 2 இயற்பியல் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட 262 மாணவர்களுக்கு, வரும் 22ம் தேதி மறு தேர்வு நடக்கும்’ என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித் துள்ளார்.
பாகிஸ்தான் அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் சட்ட திருத்த மசோதா பார்லியில் நிறைவேற்றம்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபரின் அதிகாரங்களை பறிக்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா அந்நாட்டு பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
மின் கட்டணம் யூனிட்டுக்கு ஒரு ரூபாய் உயரும்
மின் கட்டணம் உயர்வு குறித்து, மதுரையில் மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக மின்வாரிய தலைவர் சி.பி.சிங் பேசியபொழுது மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ஒரு ரூபாய் உயரும் என்று தெரிவித்துள்ளார். சி.பி.சிங் பேசியதாவது:
மின்வெட்டை கண்டித்து நெய்வேலியில் 18 ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
மின்வெட்டை கண்டித்து வரும் 18 ஆம் தேதி நெய்வேலியில் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
ஆனைமலை கொப்பரை ஒரு கிலோ 31.55 ரூபாய்
பொள்ளாச்சி: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் ஒரு கிலோ கொப்பரைக்கு அதிகபட்சமாக 31.55 ரூபாய் விலை கிடைத்தது.
மின்வாரியத்திற்கு 1,652 கோடி ரூபாய் மானியம் : தமிழக அரசிற்கு ஆணையம் நிர்ணயம்
சென்னை : நடப்பு நிதியாண்டிற்காக, மின்வாரியத்திற்கு 1,652 கோடியே 43 லட்ச ரூபாயை தமிழக அரசு மானியமாக வழங்க வேண்டும் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.
வங்கி இணையதளத்தில் குளறுபடியா: பணம் இழந்தனர் துபாய் இந்தியர்கள்
துபாய்:இணையதள மோசடி மூலம் வங்கி கணக்கிலிருந்த, பணத்தை இழந்த இந்தியர்கள், தங்கள் பணத்தை திருப்பி அளிக்குமாறு, ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் கோரிக்கை வைத்துள்ளனர்.அபுதாபி மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் வங்கி வாடிக்கையாளர்கள் பலர், கடந்த டிசம்பர் மாதம், பணமோசடிக்கு ஆளாகி உள்ளனர்.
தலைவிரித்தாடும் நக்சல்வாதிகள் 2 ஆண்டுகளில் அடக்கப்படுவர்:உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு
ஆவடி:”நாட்டின் முதல் விரோதிகளான நக்சல்வாதிகளை, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முற்றிலுமாக அடக்கி விடுவோம்,” என, மத்திய நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.
27 இடங்களில் புதிய கல்லூரிகள்
சென்னை:”தமிழகத்தில் புதிதாக ஏழு இடங்களில் அரசு கலைக் கல்லூரிகள் ஆரம்பிக்க அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், சம்பந்தப்பட்ட இடங்களில் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும்,” என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
நிலக்கரி இறக்குமதி முறைகேட்டை கருணாநிதியால் மறுக்க முடியுமா? ஜெயலலிதா கேள்வி
சென்னை, ஏப்.5: தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்ற முறைகேடுகளை கருணாநிதியால் ஆதாரத்துடன் மறுக்க முடியுமா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.