ஒயர்கள் இல்லா கம்ப்யூட்டர்போன்; வருது புது வசதி

posted in: உலகம் | 0

லண்டன்:கம்ப்யூட்டர், டெலிபோன், ‘டிவி’ என எதை வாங்கினாலும், ஒயர்கள் இணைப்பு தேவைப்படுகிறது; எதிர்காலத்தில் ஒயர்களே இல்லாத இந்த வகை சாதனங்கள் வரப்போகின்றன.

‘நரி’ வாங்க ஆசைப்பட்ட கடலூர் அதிகாரி : கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

posted in: மற்றவை | 0

கடலூர் : அதிகாரி கேட்டதாக, குறவர் ஒருவர் நரியை கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சி மொழியாக தமிழை செயல்படுத்துவதில் சிக்கல்

posted in: மற்றவை | 0

தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப் பட்டாலும், அதை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தூய தமிழை முழுமையாக பயன்படுத்தும் அரசுத் துறைகள், அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர் களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்துவதுடன் தமிழ் வளர்ச்சித் துறை முடங்கிப் போய் விடுகிறது.

சுத்தமான பெட்ரோல் விற்பனை: ஏப்., 1 முதல் விலை 41 பைசா கூடும்

புதுடில்லி: ‘இந்தியாவில் உள்ள 13 பெருநகரங்களில், வரும் 1ம் தேதி முதல், யூரோ-4 வாகன நியதிப்படி சுத்தமான எரிபொருள் விற்பனை செய்ய உள்ளதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசும், டீசல் விலை லிட்டருக்கு 26 காசும் அதிகரிக்கும்’ என, பெட்ரோலியத் துறை செயலர் சுந்தரேசன் தெரிவித்தார்.

ஊனமுற்றோருக்கு இடைநிலைக்கல்வி : அரசு வழங்குகிறது புது சலுகைகள்

posted in: கல்வி | 0

விருதுநகர் : ஊனமுற்றோர் அனைவருக்கும் பொதுப்பள்ளிகளில் இடைநிலைக்கல்வி வழங்க, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து புதிய சலுகைகள் வழங்கப்பட உள்ளது.

3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை தற்கொலை: காளி அம்மனுக்கு பலிகொடுத்த கொடூரம்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்த இந்து ஒருவர் , காளிக்கு தனது மூன்று குழந்தைகளையும் கழுத்தை அறுத்து பலி கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

கருத்து கணிப்பை முழுமையாக ஏற்க மாட்டேன் * பென்னாகரத்தில் கருணாநிதி பேச்சு

posted in: அரசியல் | 0

பென்னாகரம்:யாருக்கு செல்வாக்கு அதிகம் என, கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளனர். அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதில் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும். கருத்துக் கணிப்பில் தி.மு.க., முதலிடம், பா.ம.க., இரண்டாமிடம், அ.தி.மு.க., மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கணிப்பொறித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா-​ இஸ்ரேல் முடிவு

posted in: உலகம் | 0

ஜெருசலேம்,​​ மார்ச் 23: கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும்,​​ இஸ்ரேலும் முடிவெடுத்துள்ளன.

சமச்சீர் கல்வி:​ 2 முதல் 10 வகுப்பு வரை புத்தகங்கள் எழுத பாட வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

posted in: கல்வி | 0

சென்னை,​​ மார்ச் 23:​ சமச்சீர் கல்விக்கான இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஏழு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் எழுத பாட வாரியாக இணை இயக்குநர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.