பாராளுமன்றத்தில் திட்டவட்ட அறிவிப்பு; பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாபஸ் இல்லை-பிரணாப் முகர்ஜி
மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக, பெட்ரோல்-டீசல் விலை உடனடியாக உயர்த்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கூட்டணி கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும், இந்த முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
நேரு குடும்பத்திலேயே முதல் முறையாக சத்தியமூர்த்தி பவன் செல்லும் சோனியா
சென்னை: இதுவரை நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாருமே, சென்னையில் உள்ள காங்கிரஸ் [^] தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு ஒரு முறை கூட வந்ததில்லை. அந்தப் பெருமையை முதல் முறையாக உடைத்து அங்கு விசிட் அடிக்கவுள்ளார் சோனியா காந்தி.
புதிய சட்டசபை கட்டிடம் நாளை திறப்பு: பிரதமர் மன்மோகன்சிங்-சோனியா வருகை; கருணாநிதி தலைமையில் கோலாகல விழா
சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
நானோ கார் விலை அதிகரிக்கலாம் : டாடா மோட்டார் தகவல்
ஜெனீவா: டாடா மோட்டார் நிறுவனம் தயாரிக்கும் நானோ காரின் விலை அதிகரிக்கக் கூடும் என்ற தகவலை அந்நிறுவனம் வெளியிட் டுள்ளது. இந்தியாவின் பிரபலமான டாடா மோட்டார் நிறுவனம், ஒரு லட்ச ரூபாயில் நானோ கார் தயாரித்து வெளியிடுவதாகத் தெரிவித்தது. அதன் பின் அந்தக் காருக்கான முன்பதிவு துவங்கியது.
சேது சமுத்திர திட்டம்; ஏப்ரல் 5-ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் முடிவு
சேதுசமுத்திரத் திட்ட வழக்கில், மாற்றுப் பாதை வழியாக திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வரும் ஏப்ரல் 5-ம் தேதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
பயங்கரவாதிக்கு பணம் கொடுத்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ
புதுதில்லி, மார்ச் 11: இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 2 பேருக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பணம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது : இரான் அதிபர்
அமெரிக்கா முன்னாளில் ஆதரவு வழங்கியவர்களையே இன்னாளில் இரட்டை வேடம் போட்டு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் எனக்கூறி தாக்குகிறது இரான் அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுனாமியை முன்னதாக அறிய உதவும் நியூட்ரினோ ஆய்வு
மதுரை : “நியூட்ரினோ ஆய்வு வலுப்பெறும்போது, பூமியின் அகநிகழ்வுகளை படம் பிடித்து காட்ட வாய்ப்புள்ளது. இதன் மூலம் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை முன்னதாக அறிய முடியும்,’ என்று மதுரையில் நடந்த கலந்துரையாடலில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
பொருளாதாரத்தை நெருக்கடிக்கு தள்ளியது பட்ஜெட் : அரசு மீது எம்.பி.,க்கள் புகார்
புதுடில்லி : “அதிகரிக்கும் பணவீக்கம், உள்நாட்டு சேமிப்பு, உள்கட்டமைப்பு போன்றவற்றை மன்மோகன் சிங் அரசு புறக்கணித்து விட்டது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கடும் நெருக்கடி நிலைமைக்கு தள்ளி விட்டது.
கல்விக் கடன் வழங்க மறுத்த வங்கிக்கு:5,000 ரூ. வழக்கு செலவு தொகை விதிப்பு
சென்னை:கல்விக் கடன் வழங்க மறுத்த வங்கி, 5,000 ரூபாய் வழக்கு செலவுத் தொகை செலுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட் விதித்துள்ளது.கோவையில் உள்ள ஒரு கல்லூரியில், தினேஷ் என்பவர் ஏரோனாடிக்கல் பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.