காதை காதால் மூடிக்கொள்ளும் அதிசய சிறுவன்
வால்பாறை: வாயை மூடி திறப்பது போல், தன் காதுகளை காதால் மூடித்திறக்கும் சிறுவனின் செயலை பொதுமக்கள் அதிசயமாக பார்க்கின்றனர்.
விமான நிலையங்கள் மீது தாக்குதல் அபாயம் : புதிதாக எச்சரிக்கை
புதுடில்லி : போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நேரத்தில் விமான நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அதிகப்படியான சேதத்தை விளைக்கத் திட்டமிட்டிருப்பதாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு சட்டமானால் லோக்சபாவில் 181 பெண் எம்.பி.,க்கள்
புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் தற்போது லோக்சபாவில் 181 பெண் எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்க கோரிக்கை : மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை : “ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை தள்ளிவைக்கக் கோரிய மனு மீது மத்திய அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம்: மார்ச் 17-ல் கையெழுத்து
இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மார்ச் 17-ம் தேதி வாஷிங்டனில் கையெழுத்தாகிறது. இதற்காக மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையிலான குழு அமெரிக்கா செல்கிறது.
தமிழகம் சார்பில் பெண் எம்.பி.,க்கள் 13, எம்.எல்.ஏ.,க்கள் 77: இட ஒதுக்கீட்டால் உயருகிறது
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பார்லிமென்டில் நிறைவேறுவதால், தமிழகத்தில் இருந்து லோக்சபா மற்றும் சட்டசபைக்கு பெண்களின் பிரதிநிதித்துவம் பல மடங்கு அதிகரிக்க உள்ளது.
பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், ‘லாகரிதம்’ குளறுபடி : மாணவர்கள் தவிப்பு
கோவை : பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், தனியார் பள்ளி நிர்வாகம் அளித்த தவறான, “லாகரிதம்’ அட்டவணை காரணமாக, கோவை தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தவறான விடை எழுதி மதிப்பெண்களை இழந்தனர்.
நிகர்நிலை பல்கலைகள் குறித்த பரிந்துரைகள் பகிரங்கம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி : “நிகர்நிலைப் பல்கலைகளின் செயல் பாடுகள் குறித்து டாண்டன் கமிட்டி அளித்த பரிந்துரைகளை, இன்டர் நெட்டில் பகிரங்கமாக வெளியிட வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வீடு, கார் கடன் வட்டி வகிதம் 50 புள்ளிகள் வரை அதிகரிப்பு
டெல்லி: ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்ததன் விளைவாக ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடாக் மஹிந்தரா உள்ளிட்ட வங்கிகள் கார் மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் வரை கூட்டியுள்ளன.
தி ஹர்ட் லாக்கர்’ படத்துக்கு ஆறு ஆஸ்கர் விருதுகள்
லாஸ் ஏஞ்சல்ஸ் : ஈராக் போர் தொடர்பான திரைக்கதையை அடிப்படையாக கொண்ட “தி ஹர்ட் லாக்கர்’ என்ற படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. “அவதார்’ படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.