பொன்சேகாவின் உண்ணாவிரதம் பற்றி எதுவும் தெரியாது: இலங்கை ராணுவம்
கொழும்பு, மார்ச் 8: இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவின் உண்ணாவிரதம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என இலங்கை ராணுவச் செய்தித்தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசளிப்பு, குழந்தைகளுக்கு மடிக்கணிணி: துணைமுதல்வர் வழங்கினார்
பால்வளத்துறை சார்பாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகமாக பால் வழங்கிய 10 உறுப்பினர்களுக்கு ரொக்கப்பரிசு, மாநில அளவில் சிறந்த 3 சங்கங்களின் செயலாளர்களுக்கு ஊக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ராணுவ வீரருக்கு 4 ஆண்டு சிறை
மோகா: (பஞ்சாப்) ; பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிறுமியை கடத்தி சில்மிஷம் செய்த ராணுவ வீரருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பஞ்சாப் பாம்பியாபாய் கிராமத்தில் வசிக்கும் புக்கர்சிங் மகள் வாசுகி ( பெயற் மாற்றப்பட்டுள்ளது) .
தே.மு.தி.க., சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிக்கை
சென்னை : “”மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக அரியலூரில் நாளை (மார்ச் 7) தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித் துள்ளார்.
இளைஞர்கள் தனித்திறனை வளர்த்து சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கலாம்: கலாம்
சென்னை : “”தங்கள் தனித்திறனை வளர்த்து கொள்வதன் மூலம், இளைஞர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்ற முடியும்,” என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
வடக்கு நீதிமன்றக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண நடவடிக்கை : மிலிந்த மொரகொட
வடக்கு நீதிமன்றக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து 300 பேர் தேர்வாகி சாதனை
சென்னை : மத்திய பொதுப் பணியாளர் தேர் வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வுகளில், நாடு முழுவதும் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில், தமிழகத்திலிருந்து 300க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று சாதித்துள்ளனர்.
பணி நேரத்தில் கிரிக்கெட் ‘கமென்டரி’ கேட்டால் வேலையை விட்டு நீக்கலாம்
புதுடில்லி :”இந்தியா, கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள நாடாக இருக்கலாம். அதற்காக, பணி நேரத்தின்போது, ரேடியோவில் கிரிக்கெட் நேர்முக வர்ணனையை கேட்பது என்பது சரியான நடவடிக்கை அல்ல.
விண்கல் மோதியதால் டைனோசர் இனம் அழிவு : விஞ்ஞானிகள் புதிய விளக்கம்
லண்டன் : பூமியின் மீது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன், விண்கல் மோதியதால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக, டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்மோகன் – சோனியா இடையே மோதலா?
புதுடில்லி : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்., தலைவர் சோனியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.