இங்கிலாந்து அரசிடமிருந்து டிசிஎஸ்-ஸுக்கு ரூ. 4150 கோடி ஆர்ட
பெங்களூர்: நாட்டின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம், இங்கிலாந்து அரசிடமிருந்து ரூ. 4150 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 3 வயது இந்தியக் குழந்தை கொலை
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா [^]வில் 3 வயது இந்தியக் குழந்தை கடத்திக் கொலை [^] செய்யப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சவுண்டையா சவுண்டாகத்தான்’ இருக்கிறது-கருணாநிதி
திருச்சி: மாற்றுத்திறன் உடையோருக்கென ஒரு மாபெரும் உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
மூன்று மாதங்களில் தீர்ப்பு : வருகிறது புது சட்டம்
புதுடில்லி : “ஒரு வழக்கில் வாத, பிரதிவாதங் கள் முடிந்த மூன்று மாதங்களுக் குள் நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும். அதற்கு மேல் அவர் காலம் தாழ்த்தக் கூடாது’ என, மத்திய அரசு புதிதாக கொண்டு வர உள்ள சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
10 ஆண்டுகளில் 400 புதிய விமான நிலையம்: பிரபுல் படேல்
ஐதராபாத் : அடுத்த 10 ஆண்டுகளில் 400 புதிய விமான நிலையங்கள், 3,000 விமானங்கள் நம்நாட்டுக்கு தேவை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாபஸ் இல்லை: சோனியா அறிவிப்பு
பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
வேண்டாம் ரகசிய ஒப்பந்தம்: அத்வானி
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் பாகிஸ்தானிடம் எச்சரிக்கையாக இருங்கள்,காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அந்த நாட்டுடன் ரகசியமாக பேச்சு நடத்தி ஒப்பந்தம் எதையும் செய்து கொள்ளாதீர்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசை எச்சரித்தார் லால் கிருஷ்ண அத்வானி.
இந்தியர்கள் குறித்த தகவல்: தீவிரவாதிகளுக்கு முன்னரே தெரியும்: “வாஷிங்டன் போஸ்ட்’ தகவல்
கடந்த வாரம் காபூல் நகரில் 2 ஹோட்டல்களில் தங்கியிருந்த இந்தியர்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொண்டுதான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
டெஸ்டிலிருந்து விரைவில் ஓய்வு
மெல்போர்ன், மார்ச் 3: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெறப்போவதாக இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
பொம்மை விமானம் மோதி இன்ஜினியர் பரிதாப சாவு
கோலாலம்பூர்:மலேசியாவில், ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் பொம்மை விமானம் ஒன்று தாக்கியதால், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார்.