பேராசையல்ல…பெருமைப்படும் ஆசை
சொல்லித் தீருவதில்லை வள்ளுவனின் புகழும் திருக்குறளின் மாண்பும். குமரியில், விண்ணைத் தொடும் 133 அடி சிலை நிறுவியும், தடை பல தாண்டி கர்நாடகாவில் சிலை வைத்தும் வான் புகழ் வள்ளுவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது
சசி தரூர் பொறுப்பற்ற பேச்சு பிரதமர் முடிவு கட்ட கோரிக்கை
ஐதராபாத் : “வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூரின் பொறுப்பற்ற அறிக்கைக்கு பிரதமர் மன்மோகன்சிங் முடிவு கட்ட வேண்டும்’ என, பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சமச்சீர் கல்விக்கு விலை குறைந்த ‘கலர்புல்’ நூல்கள்: தமிழக தொடக்க கல்வி இயக்குனர் தகவல்
கோவை:”வரும் கல்வியாண்டு தமிழகம் முழுவதும் உள்ள முதல் வகுப்பு குழந்தைகளுக்கு, கலர் கலரான புத்தகங்கள் குறைந்த விலையில் வழங்கப்படும்’ என, தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறினார்.
நிலவில் ஐஸ் கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா
நாசா: நிலவில் தண்ணீர் இருக்கிறது என கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான்- 1 ஆள் இல்லா விண்கலம் கண்டு பிடித்து கொடுத்தது.
உலக கோப்பை ஹாக்கி: இந்தியா அபார வெற்றி : பரிதாபமாக வீழ்ந்தது பாக்.,
புதுடில்லி : உலக கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உள்ளூர் சர்ச்சைகளை கடந்து சாதித்த இந்திய அணிக்கு சந்தீப் சிங் கைகொடுத்தார். இவர் இரண்டு கோல் அடித்து, ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.
இலவச ‘சூரிய’ மின் சக்தி : தயாராகுமா தமிழகம்- இல.ஆ.,
இயற்கை இலவசமாக வழங்கும் அபரிமிதமான சூரிய ஒளி எரிசக்தியைப் பயன்படுத்திக்கொள்ள, மத்திய மற்றும் மாநில அரசுகள், அடிப்படையாக உள்ள பிரச்னைகளைகளைய வேண்டும் என்று தடையில்லா மின்சாரம் பெற விரும்புவோர் தெரிவிக்கின்றனர்.
அசத்துகிறது சீனா:உலகின் மிக அதிவேக ரயில் அறிமுகம் : மணிக்கு 354 கி.மீ., வேகத்தில் ஓடும்
பீஜிங் : சீனாவில் மணிக்கு 354 கி.மீ., வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரை விட, மிக வேகமாக செல்லும் திறன் இந்த ரயிலுக்கு உண்டு.
அருந்ததியின மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு: வலசை ரவிச்சந்திரன்
தமிழக முதல்வர் அறிவித்த உள் இடஒதுக்கீட்டால் அருந்ததியர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அருந்ததியர் மக்கள் கட்சித் தலைவர் வலசை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காவல்நிலையங்கள் 3 வகையாக பிரிக்கப்படும்: டி.ஜி.பி லத்திகா சரண்
மாநிலம் முழுவதும் உள்ள காவல்நிலையங்கள் லைட், மீடியம், ஹெவி என மூன்று வகையாக பிரிக்கப்படும் என்று டி.ஜி.பி லத்திகா சரண் கூறினார்.
கம்ப்யூட்டரில் ‘செக்’ போடுங்க கணக்கில் பணத்தை சேருங்க வந்திருச்சி லேட்டஸ்ட்
நியூயார்க் : “செக்’ கையெழுத்து போட்டு, அதை வங்கிக்குச் சென்று நேரில் கொடுத்து பணம் எடுக்கும் வழக்கம் காணாமல் போய்விடும். ஆம். வீட்டிலிருந்தபடியே உங்கள் “செக்’கை கம்ப்யூட்டரில் அனுப்பினால், பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும்.