மரங்களை பாதுகாக்க ஆம்புலன்ஸ்: டில்லி மாநகராட்சி கலக்கல் திட்டம்
புதுடில்லி : தலைநகர் டில்லியை பசுமை மயமாக்கும் முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. நகரில் உள்ள மரங்களை பேணி பாதுகாப்பதற்கு வசதியாக ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம்: இந்தியா - பிரிட்டன் கையெழுத்து
புது தில்லி, பிப். 11: அணுசக்தி ஒத்துழைப்பு கூட்டு பிரகடனத்தில் இந்தியாவும் பிரிட்டனும் வியாழக்கிழமை கையெழுத்திட்டன.
பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு: காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை
சென்னை, பிப். 11: பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
பொன்சேகாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
கோலாலம்பூர், பிப். 11: சரத் பொன்சேகாவுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளார்.
யானைமலையில் ஒரு கல்லைக் கூட தொடக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை:சிற்பக் கலைநகரம் அமைப்பது குறித்து யானைமலையை ஆய்வு செய்யும் போது, கோர்ட் உத்தரவின்றி ஒரு சிறிய கல்லைக் கூட தொடக் கூடாது என, மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
சீன ஆயுத தயாரிப்புகளை உன்னிப்பாக கவனிக்கிறது அரசு: அந்தோணி பேட்டி
புதுடில்லி: சீனாவின் ஆயுத தயாரிப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
கொள்ளை லாபம் அடிப்பதை அனுமதிக்க மாட்டோம்: கல்வி நிறுவனங்களுக்கு கபில் சிபல் எச்சரிக்கை
புது தில்லி, பிப்.10: கல்வியை பணம் கொழிக்கும் தொழிலாகக் கருதி கொள்ளை லாபம் அடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
வீடற்றவர்களுக்கு ரேஷன் கார்டுகள்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி:”டில்லியில் வீடில்லாமல் இருக்கும் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும். ஒவ்வொரு கார்டு தாரருக்கும் 10 லிட்டர் கெரசின் மற்றும் 15 கிலோ உணவு தானியங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்’ என, அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் தமிழ் பள்ளிக் கட்டடத்தை சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்
நகரி : ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சந்திரபாபு நாயுடு, தமிழ் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
கொசுக்களை விரட்டும் மொபைல்போன் ரிங்டோன்
புதுடில்லி:ரத்தம் உறிஞ்சும் கொ சுக்களை விரட்ட, கொசுவர்த்திச் சுருள், ஸ்பிரே, க்ரீம் போன்றவை இனித் தேவையில்லை. அதற்குப் பதிலாக சில மொபைல் போன்களிலிருந்து வரும் ஒலியே, கொசுக்களை விரட்டி விடுகிறது.