அக்னி-3′ ஏவுகணைசோதனை வெற்றி
பாலசூர்:அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கவல்ல, “அக்னி-3′ ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை, 3,500 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கவல்லது.
உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு முன்னதாகவே சதாம் உசேனை அகற்ற பிரிட்டன் ரகசிய திட்டம்: புதிய தகவலால் பரபரப்பு
லண்டன்:அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு முன்னதாகவே, அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனை பதவியில் இருந்து அகற்றுவதற்கு, பிரிட்டன் ரகசிய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001 செப்டம்பரில் அல்-குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர்.
தமிழகத்திற்கு எரிவாயுவை பெற்றுத் தர பிரதமரிடம் ஸ்டாலின் வேண்டுகோள்
புதுடில்லி:”கிருஷ்ணா கோதாவரி படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவில், தமிழகத்திற்கு உரிய பங்கை பெற்றுத் தந்திட மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங்கிடம், துணை முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
மீனவர்களுக்கு மாற்று தொழிலாக அமையும் மிதவை கூண்டில் சிங்கி இறால் மீன் வளர்ப்பு : மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி தகவல்
ராமேஸ்வரம்: “”கடலில் மிதவை கூண்டுகளில் சிங்கி இறால் மீன்களை வளர்ப்பது, கடலோர மீனவர்களுக்கு அதிக வருவாய் தரக்கூடிய மாற்று தொழிலாக அமையும்,” என, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி கோபகுமார் தெரிவித்தார்.
யாழில் இந்தியா தூதுவராலயம் திறக்கும் நோக்கம், தமிழர் பண்பாட்டை சிதைத்து, சமுதாய சீரழிவை செயல்படுத்தவே
இந்தியா யாழில் தூதுவராலயம் திறக்கும் நோக்கம் இந்திய உளவுபிரிவான “றோ” அங்கே அலுவலகம் திறந்து தமிழர் பண்பாட்டை சிதைப்பதற்கும் தேசியத்தில் உள்ள உள்ள மாணவர்களை அழித்து யாழில் சமுதாய சீரழிவை செயல்படுத்தவுமே என புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
7 நாட்களில் பிரச்னையை தீர்த்துவைப்பேன்
புதுடெல்லி : மேற்கு வங்கத்தில் சணல் தொழிலாளர்கள் நடத்திவரும் வேலை நிறுத்த போராட்டத்தை 7 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவருவேன் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் உறுதியளித்துள்ளார்.
சாப்ட்வேர், பீபிஓ துறையில் ரூ.2.28 லட்சம் கோடி ஏற்றுமதி
புதுடெல்லி : தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீபிஓ துறையில் இந்த ஆண்டு 1.5 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என நாஸ்காம் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகளாவிய சூழலுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டும்
கோவை: “உலகளாவிய பொருளாதார சூழலுக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்,” என்று இந்திய கல்லூரிகள் சங்கத் தலைவர் சர்மா கூறினார்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி : மார்ச் 7ம் தேதி முதல்வர் திறக்கிறார்
விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை மார்ச் 7ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
பருவ நிலை விஞ்ஞானி பச்சோரிக்கு முழு ஆதரவு : கார்பன் வெளியேற்றம் குறைக்க யோசனை
புதுடில்லி : “பருவ நிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான அமைப்பு (ஐ.பி.சி.சி.,) நடவடிக்கைகள் மீது முழு நம்பிக்கை உள்ளது;