ஆதாரம் எங்கே? கேரளாவிடம் கேள்வி
புதுடில்லி : “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தினால், அது அணையை பாதிக்குமா? அணையின் நீர்மட்டம் 155 அடியை எட்டினால், அணை உடையும் என்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேரள அரசு சமர்ப்பிக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை : பரேக் அறிக்கையை அரசு ஏற்குமா
புதுடில்லி : “சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 100 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் அதிகரிக்கலாம்’ என, கிரித் பரேக் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ராஜபக்ஷேயை கொல்ல சதி என 37 பேர் கைது : இலங்கையில் அரசியல் விரோதம் தீவிரம்
கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக, முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 37 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தலாய் லாமாவை ஒபாமா சந்திக்கக் கூடாது; அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
பெய்ஜிங், பிப். 2: திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்திக்கக் கூடாது. அவ்வாறு சந்தித்தால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள உறவு கடுமையாகப் பாதிக்கும் என்று சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜு வெய்கூன் எச்சரித்தார்.
ஒரு ஆசிரியர்; 102 மாணவர்கள் : எப்படி முன்னேறும் விழுப்புரம்
தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த சாத்தனூர் தொடக்கப் பள்ளியில் 102 மாணவர்களுக்கு ஓராண்டாக, ஒரே ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.
பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தில் தலையிட பிரதமருக்கு கடிதம்
புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் தலையிட்டு நிர்வாகத்தை மாற்றி, புதிய அதிகாரிகளை நியமிக்கும்படி அந்நிறுவன ஊழியர்கள் அசோசியேஷன், பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
பிரபாகரன் இறப்பு சான்றிதழ் தடா கோர்ட்டில் தாக்கலாகுமா
சென்னை : விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பு சான்றிதழ், சென்னை தடா கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுமா என்ற விவரம், இந்த மாத இறுதியில் தெரிய வரும்.
அமெரிக்காவும் சீனாவும் பிரிந்துபோக முடியாது : வெள்ளை மாளிகை
தைவானுக்கு ஆயுதம் விற்பது, கூகுள் செயல்பாட்டிற்குத் தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்தாலும், அமெரிக்காவும் சீனாவும் ஒன்றை விட்டு மற்றொன்று பிரிந்து செல்ல முடியாது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
தனியார் பள்ளி கட்டண விவரம்: பிப்ரவரி 5}க்குள் தாக்கல் செய்ய மும்முரம்
சென்னை, பிப். 2: தனியார் பள்ளிகளில் திரட்டப்பட்ட பல்வேறு வகையான கட்டணம் உள்ளிட்ட விவரங்கள், பிப்ரவரி 5}ம் தேதிக்குள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரிடம் தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்சூரன்ஸுக்காக ‘தாக்குதல் நாடகம்’ நடத்திய இந்தியர்
மெல்போர்ன்: இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவற்காக, தன்னை சிலர் தாக்கி எரிக்க முயன்றதாக கூறி நாடகமாடியுள்ளார் ஜஸ்பிரீத் சிங் என ஆஸ்திரேலிய போலீஸார் கூறியுள்ளனர்.