அமைச்சர் முரளிதரனுக்கு வழங்கப்பட்ட பதவி எஸ்.பிக்கும் வழங்கப்படவுள்ளது
தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு வழங்கப்பட்ட கட்சியின் உப தலைவர் பதவியே எஸ்.பி திஸாநாயக்கவிற்கும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வருகிறது பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்
சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 110 ஆரம்ப சுகாதார நிலையங்கள் : அமைச்சர் பன்னீர்செல்வம்
நடுவீரப்பட்டு : தமிழகத்தில் புதிதாக 110 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கடலூர் அடுத்த வெள்ளக்கரை ஊராட்சி வி.காட்டுபாளையத்தில் இலவச கலர் “டிவி’ வழங்கும் விழா நடந்தது.
இவர், இப்படி…
தள்ளாத வயதில் “உயர்ந்த’ சாதனை: உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தில் மிக அதிக வயதில் ஏறி சாதனை படைத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி இருப்பவர் மின் பகதூர் ஷெர்ச்சான்.
பணி நேரத்தில் சொந்த வேலையா?பள்ளி எச்.எம்.,களுக்கு கிடுக்கிப்பிடி
பணி நேரத்தில் சொந்த வேலை பார்க்கும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை ஒழுங்குபடுத்த, கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்துள்ளது, பள்ளி கல்வித்துறை. இதே போன்ற உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள பிறப்பிக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாகாலாந்து மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய அதிகாரிகள்
திமாபூர் : நாகாலாந்து மாநிலத்தின் முன்னேற்றத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். அவர்களை, அம்மாநில மக்கள் கவுரவப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைஅமைப்பதே லட்சியம்: வாசன்
சென்னை:””தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் நம் லட்சியம். அதற்கேற்ப நாம் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்,” என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசினார்.
ரூ.150 கோடி முதலீட்டில் தர்மபுரி மாவட்டத்தில் ஹட்சன் புதிய ஆலை
சென்னை: பால் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமான ஹட்சன், தர்மபுரி மாவட்டம் பாலகோடுவில் ரூ.150 கோடி முதலீட்டில் புதிய ஆலையை திறந்துள்ளது.
பட்டனை தட்டினால் விரும்பிய உணவுகளை தயாரித்து தரும் எந்திரம்: பிளஸ்-2 மாணவர் உருவாக்கினார்
பீகார் மாநிலம் பகல்பூர் ஆர்யபட்டா பப்ளிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் அபிஷேக்.
சரத் பொன்சேகாவின் ஆட்சி காலத்தில் புலிகளின் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும்: ரணில்
ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவரின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.