செல் போன் எடுக்காத அமைச்சர் செந்தில்பாலாஜி – தொண்டர்கள் வேதனை!
கரூர்: போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செல் போன் கடந்த சில நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் பயங்கரம்-ஆம்புலன்ஸ் விமானம் வீட்டின் மீது விழுந்து 10 பேர் பலி
டெல்லி: டெல்லி அருகே பரீதாபாத் என்ற இடத்தில் குடியிருப்புப் பகுதியில் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானார்கள்.
டில்லியில் சோனியாவை சந்திக்காதது ஏன்? கருணாநிதி விளக்கம்
சென்னை :””கனிமொழி சிறையில் இருக்கும் நேரத்தில், சோனியாவுக்கு சங்கடம் ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காக, டில்லியில் அவரை சந்திக்கவில்லை,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
செய்யாத குற்றத்திற்கு நேர்ந்த அவமானம் : இந்திய அதிகாரியின் மகள் பெரும் தவிப்பு
நியூயார்க் : அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரி ஒருவரின் மகள், செய்யாத குற்றத்திற்காக சிறைப்பட்டு, அங்கு அவமானப்பட்ட சம்பவம், தற்போது வெளியாகியுள்ளது.
வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை: கோதபயசவுக்கு எதிராக பொன்சேகா சாட்சியம்
கொழும்பு: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார் என்று அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
சச்சின் அணிக்கு “டென்ஷன்’ வெற்றி! * கோல்கட்டா அணி “அவுட்’
மும்பை: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஒரு நாளில் 5.67 லட்சம்; 30 நாளில் 41.14 லட்சம் ரூபாய்க்கு போன் பில்: பயங்கரவாதிகள் சதியா?
சிறிய அளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்தவரின் அலுவலக தொலைபேசிக்கு ஒரு மாதத்தில் 41 லட்சம் ரூபாய் போன் பேசியதாக தனியார் தொலைபேசி நிறுவனம் பில் அனுப்பியதால், அதிர்ச்சியில் உச்சகட்டத்திற்கே சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
அரசு வேலைக்காக 70 லட்சம் பேர் காத்திருப்பு
தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து, அரசு வேலைக்காக, 70 லட்சம் பேர் காத்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
அட்வகேட் ஜெனரலாக நவநீதகிருஷ்ணன் நியமனம்
சென்னை: தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக, வக்கீல் நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
மும்பை: ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த “பிளே-ஆப்’ போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.