மாணவர்களுக்கு இலவச “லேப்-டாப்’: கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு
பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச, “லேப்-டாப்’ வழங்குவதற்காக, மாவட்ட வாரியாக மாணவர்கள் குறித்த விவரங்களை கணக்கெடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் மேம்படுத்தப்படும்; அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டி
முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மேம்படுத்தப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அரசு வீடு வழங்கும் திட்டம் இந்த ஆட்சியில் தொடருமா? பயனாளிகளுக்கு சந்தேகம்
பொள்ளாச்சி: தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், “கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட, அரசு வீடு வழங்கும் திட்டம் இந்த ஆட்சியில் தொடருமா’ என்ற சந்தேகம், பயனாளிகளிடையே வலுத்துள்ளது.
தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வி திட்டம் நீடிக்கும்
சமச்சீர் கல்வி திட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்றும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சூசகமாக தெரிவித்தார்.
சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி: கொச்சி அணி ஏமாற்றம்
சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை வீழ்த்தியது.
ஜனவரி – மார்ச் மாத காலத்தில்கம்ப்யூட்டர் விற்பனை 26 லட்சமாக உயர்வு
மும்பை:நடப்பு 2011ம் ஆண்டின், ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், உள்நாட்டில் கம்ப் யூட்டர் விற்பனை, 26 லட்சமாக அதிகரித்துள்ளது.
எல்லாவற்றையும் விட மனைவியை நேசித்தவன்” ராஜினாமா செய்த ஐ.எம்.எப்., தலைவர் கவலை
நியூயார்க்: சர்வதேச நிதியக்குழு ( ஐ.எம்.எப்., ) தலைவர் டோமினிக் ஸ்ட்ராஸ்கான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பெண்ணை வழியனுப்பும் விழா இன்போசிஸ் மூர்த்தி வர்ணனை
புதுடில்லி : “இன்போசிஸ் நிறுவனத்துக்கும், எனக்கும் இடையிலான உறவு, திருமணம் முடிந்து, தாய் வீட்டை பிரிந்து செல்லும் பெண்ணை வழியனுப்புவது போன்றது’ என்று இதன் நிறுவனரும், தலைவருமான என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் அதிமுகவுக்கு பங்கில்லை-புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ஜெ. கண்டனம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசில் அதிமுகவுக்கு இடமளிக்காததற்கு முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ரங்கசாமிக்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சோம்நாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் மம்தா :குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து உற்சாகம்
கோல்கட்டா:மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சட்டர்ஜி வீட்டுக்கு சென்று, அவரிடம் வாழ்த்து பெற்றது, மார்க்சிஸ்ட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.