பிரீபெய்டு வாடிக்கையாளருக்கும் ஜி.பி.ஆர்.எஸ் வசதி தரும் பிஎஸ்என்எல்!
சென்னை: தமிழக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே இது பெரிய செய்திதான். பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு திட்டத்தில் உள்ள வாடிக்கையாளரும் இனி ஜிபிஆர்எஸ் வசதியை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.
ஜனாதிபதியை கொல்ல முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு 3 தமிழர்கள் கைது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கொலை திட்டமிட்டதாக கூறப்பட்டு 3 தமிழர்கள் இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகின் முதலாவது ‘திருக்குறள் நுண் ஒலி பேழை’ சென்னையில் வெளியீடு
திருக்குறள் நுண் ஒலி பேழை ஒன்று சென்னையில் முதல் தடவையாக வெளியிடப்பட்டுள்ளது. “தமிழனுக்கு – தமிழனால் – தமிழருக்காக திருக்குறள் கலைஞர் உரை” என்ற மகுடத்தில் அழகான முகப்பில் இந்த நுண்ஒலிப் பேழை வெளிவந்திருக்கின்றது.
வருமான வரி விலக்கு ரூ. 1.8 லட்சமாகிறது?
டெல்லி: வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ. 1.8 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
புலிகளைத் தோற்கடித்ததற்காக பாகிஸ்தான் இராணுவத் தளபதி வழங்கிய விருந்துபசாரம்
இலங்கையில் நடைபெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டமைக்காக பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஸ்பக் பர்வேஷ் கயானி இராப்போசன விருந்தொன்றை வழங்கியுள்ளார்.
ரயில்வே அதிகாரிகளாக போலி பணி நியமன உத்தரவு: ஹோமியோபதி டாக்டர், பெண் சிறையில் அடைப்பு
மதுரை: ரயில்வே பாதுகாப்புப்படையில், அதிகாரிகளாக வேலை வாங்கி கொடுப்பதாகக்கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த ஹோமியோபதி டாக்டர், பெண் ஆகியோர் மதுரை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழீழத்தை நோக்கிய பயணத்திற்கு மலேசிய தமிழர்கள் எப்பொழுதும் ஆதரவாகவே இருப்பார்கள்: பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி
தமிழீழத்தை நோக்கிய தூரநோக்குப் பயணத்திற்கு மலேசியத் தமிழர்கள் எப்பொழுதும் ஆதரவாகவே இருப்பார்கள் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வரான பேராசிரியர் இராமசாமி கூறியுள்ளார்
தலைவருக்கு வீரவணக்கம்: விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை உறுதிப்படுத்தி விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பலகோடி ஆசை காட்டும் எஸ்.எம்.எஸ்.,கள்: உஷார்
மதுரை: “”பல கோடி ரூபாய் பரிசுக்கு உங்கள் மொபைல் எண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,” எனக் கூறி பரவும் எஸ்.எம்.எஸ்.,களை நம்பி ஏமாறாமல், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இன்டர்நெட்டில் இ-மெயில் அறிமுகமான காலத்திலேயே மோசடித்தனமும் அறிமுகமானது.
மேற்கு வங்கம் : மாவோயிஸ்டுகள் கோட்டைக்குள் நுழைந்தது ராணுவம்
மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடியினர் பிடியில் உள்ள கிராமங்களை மீட்க அப்பகுதிகளுக்குள் போலீஸ் படையும் ராணுவமும் நுழைந்துள்ளது.