எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்
- மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காக பெற்றோர்கள் துன்புறத்துக்கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்கள் கஷ்டப்படுத்தக்கூடாது. நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
- கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.
- சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடி வரும். சிரமங்களைக்கொண்டு மனம் இடிந்து விடக்கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும், என்ன நடந்தாலும் கவலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்.
- திருமணம் என்பது சாதாரண வாழ்வில் நடக்குமஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்துவிடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அதுதான் அஸ்திவாரம்.
- ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.
- நீங்கள் உண்பவற்றில் மிகச் சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.
- எவ்வளவு செல்வம் வந்தாலும் நம் வேலையை நாமே செய்துகொள்ள வேண்டும். இதை மக்கள் கட்டளையாக எடுத்துக்கொண்டாலும் சரி, உபதேசமாக எடுத்துக்கொண்டாலும் சரி.
- உழைத்துச் சம்பாதிப்பவர்களே உயர்ந்தவர்கள் என்றலட்சிய்ப பிடிப்பலே அவர்கள் வாழ வேண்டும்.
- கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு நேசிக்கவேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பாச உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம் பண்பாட்டில்தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.
- வீண் ஆடம்பரம் இல்லாமல் மணமக்கள் வாழவேண்டும். பிறர் மெச்ச வேண்டும்என்பதற்காக ஊதாரித்தனமாக யாருக்கும் எந்தவித லாபமும் இல்லாமல் செலவு செய்யக்கூடாது.
- மணமக்கள் எவ்வளவு செல்வத்தோடு வாழ்ந்தாலும் எளிமையோடு இருக்க வேண்டும். பதவி வரும்பொழுது பணிவு வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். மணமக்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்களை வளர்த்த பெற்றோரை, உறவினர்களை, உங்களை உயர்த்திவிட்டவர்களை நீங்கள் என்றென்றும் மறக்காமல் இருக்க வேண்டும்.
- எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்கவேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கழகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
- நல்ல நண்பர்களை பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.
- உழைத்துப்பிழைக்கிற அனைவரும் இந்த நாட்டில் மதிக்கப்படுவர். எவ்வளவு படிப்புப்ப படித்தாலும் மேலும் வீட்டில் இருந்து படிக்க வேண்டும் என்று மணமக்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். ஒரு குடும்பத்தின் தலைவனாகிவிட்டோம் என்று கருதாமல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- உங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவன் நான். உங்கள் முன்னேற்றத்திற்காக என் வாழ்நாள் முழுவதும் பாடுபடுவேன். நான் போடும் திட்டங்களுக்கு முழுமையான பலன் கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்.
- நான் உங்களில் ஒருவன். உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவன். என் உயிர் மூச்சு உள்ளவரை உங்களுக்காகவே உழைப்பேன். எந்த சக்தியும் என்னை உங்களிடமிருந்து பிரிக்க முடியாது.
- நான் ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்றவைகளை, கண்டனத் தீர்மானம் முதலியவைகள், ஒரு நாட்டின் மேல்மக்களின் மேல் நம்பிக்கையைப் பாதுகாக்கவும், முன்னால் இருந்த தவறுகள் மீண்டும் தொடர்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தினாலும் தவறுகளைச் செய்தவர்களுக்கு மக்கள் என்ன முடிவைத் தந்திருக்கிறார்களோ அதே முடிவு இப்பொழுது இருப்பவர்களுக்கு வந்துவிடக்கூடாதே என்ற நல்ல எண்ண்த்துடன் சொல்லப்படுகின்றன.
- அரசாட்சிபுரிபவர்கள் தீர்மானங்கள் கொண்டு வருவது தேவையானது. அவர்கள் எந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துஇருக்கிறார்களோ அந்த் மக்களக்கு அவர்கள் செய்யும், ஆற்றும் கடமை என்கிற எண்ணத்தில் இந்தத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுகின்றன.
- சில நேரங்களில் அரசியல்வாதிகள்தான் ஏதோ தவிர்க்க முடியாத சூழ்நிலையின் விளைவாகத் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்திக கொள்வதற்குச் சில சூழ் நிலைகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
- ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்ற நிலைமை நாட்டிலே உருவாக்கப்படும் என்றால் அதைப்பற்றி நிச்சயமாக இந்த அரசு வரவேற்கும், ஒத்துழைக்கும்.
- வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் வன்முறைக்காக ஈடுபடுவதில்லை. வேலைநிறுத்ததிலே ஈடுபடுவர்களுக்கு இனி மேல் பட்டினி கிடப்பது முடியாது எத்தனை நாள்களுக்குத்தான் வருமானம் இல்லாமல் இருப்பது என்ற முறையிலே எண்ணம் ஏற்பட்டு வளர்ந்து, வெறுப்பு மனப்பான்மையாக அது வளரும்போதுதான் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
- சட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு அதன் விளைவாக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக கொண்டு பிறகு ஒப்பந்தங்கள் பாதகமாக இருக்கிறது அல்லது சாதகமாக இல்லை என்ற நிலையில் மாறுபாடான நிலைமையை அமைத்துக் கொள்ளக் கூடிய வேதனை தோன்றுகிறதுபோது சட்டத்திற்குப் புறம்பாக ஏதாவது ஒரு வழியைக் கடைபிடித்தாவது ஒரு நன்மையைப் பெறலாமா என்று முயற்சிப்பது சரியல்ல.
- கோபம் வருவதற்கு அடிப்படை நியாயத்தை வைத்துக் கொள்ளல் வேண்டும்.
- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுத்துப் பயன்படுத்தி உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியுமோ அந்த அளவிற்கு எதையும் செய்யலாம்.
- எந்த அளவிற்கு உங்களைப் பற்றிச் சந்தேகப்படுகிறார்கள் அல்லது குறை கூறுகிறார்கள் எங்களிடம் குற்றம் காணுகிறார்கள். குற்றம் காணுகிறவர்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறார்களோ அவ்வளவு அதிகமாக எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
- பேரறிஞர்களை இருக்கும்போது பாராட்டுவது இல்லை. மறைந்தபின் பாராட்டி வருகிறோம்.
- நம்மை நாமே ஆண்டுகொள்கிற மக்களாட்சியின் வேலை நிறுத்தங்களால் ஏற்படும் இழப்புகள் இறுதியில் உழைக்கும் வர்க்கத்திற்கே பாதகமான விளைவுகள் ஏற்படுத்தும்.
- சமத்துவச் சமுதாயம் காண்பதே உழைக்கும் வர்கத்தின் உண்மையான இலட்சியம் எனும் மூலக் கருத்திற்கு முதலிடம் தாருங்கள்; நம்மைக் காட்டிலும் நலிந்துள்ள தமது உடன்பிறப்புகளை முன்னேற்றக் கூடிய பொருளாதார மாற்றத்திற்கு அடிப்படை அமைத்திடுங்கள். புது யுகத்தின் ஈட்டி முனைகளாக முன்னோடிகளாக விளங்குங்கள்.
- உழைக்கும் கரங்கள், நாளைய புது உலகை உருவாக்கும் கரங்கள் என்பதையே வரலாறாக எழுதிக்காட்ட உழைக்கும் உடன்பிறப்புக்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
- தேசிய ஒருமைப்பாடும், ஒற்றுமை மனப்பான்மையும் நம் அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதவையாகும். மத, இன, சாதி, மொழி, முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும் ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும்.
- மக்களாட்சித் த்ததுவம் நம் நாட்டில் வேரூன்றி நிலைத்து மிளிர்கிறது. நமக்குள் எந்தப் பிரச்சினை,கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்த்துக்கொள்ள முடியும். வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது.
- அமைதி, ஒற்றுமை, முன்னேற்றம், என்ற முப்பெரும் முழக்கங்களை உயிர் மூச்சாகக் கொண்டு உழைப்போம். நாட்டை உயர்த்திடக் கடமையாற்றுவோம்.
- சரித்திரத்தில் திருப்புமுனைகளை முன் கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று யாரைக் கூறுகிறோம் என்றால் வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச் செல்கிறவர்களைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.
- நமது ஆதரவு என்பது அரசுக்கு மட்டுமல்ல. தேசத்தின் வலிமையைக் காக்கும் அதன் முயற்சிகளுக்கு என்பதைக் காலம் உணர்த்தும்.
- மக்களுக்கும் அரசுக்கும் இடையே நெருக்ககமான தொடர்பு அமைவதைப் பொறுத்தே மக்கள் ஆட்சியின் வெற்றியும் அமைந்திடும்.
- இந்தியத் துணைக்கண்டத்தை ஒன்றாக இணைத்து அதன் வாழ்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த மகத்தான சக்தியே நேரு.
- ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை; வசதி இருக்கும் போது எளிமையாக இருபதுதான் தியாகம்.
- உழைக்கும் வர்க்கம் எடுத்துக்கொள்ளும் நிலைக்கு வந்தால் தடுக்க முடியாது; ஆனால் அதற்கு முன்பு நாமே கொடுக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும் , பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.
- ஒரு மொழியை நாம் புரிந்துகொள்ள முடியாதபோது அந்த மொழியைக் கட்டாயப் படுத்தக்கூடாது.
- ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது. கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல.
- இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது.ஆனால் பெண்களின் பெயருக்கு பின்னால் இல்லை. பெண்கள் தான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
- ஜாதி என்பது அதிகமாகப் பேசப்பட வேண்டியதில்லை.
- மத மாற்ற நிலை ஏற்படக் காரணம் வறுமை, ஏழ்மை.
- என்னைப் பொறுத்தவரையில் ஜாதி கிடையாது; மதம் கிடையாது. ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்பதுதான் எனது கடவுட்கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?
- அரசியலை ஒதுக்கிவிட்டு வாழ முடியாது. வாக்குரிமை எப்போது தரப்படுகிறதோ அப்போதே ஒவ்வொருவரும் அரசியல்வாதி ஆகிவிடுகிறார்கள்.
- உயர்வு, தாழ்வு என்ற நிலை சமூகத்தில் இல்லாதபடி செய்ய வேண்டும். அதற்குரிய சட்டங்களைச் செய்ய வேண்டும். சமூக சீர்திருத்தம் பேசிப் பயனில்லை.
- தியாகம் செய்கிறவர்கள் தியாகத்திற்கு மட்டும்தான் சொந்தக்கார்ர்கள் என்கிற வரலாறு மாற்றப்படும்போதுதான் சாரணர் இயக்கத்தின் முதல் கொடி பறக்கவிடப்படும்.
- நடை, நடத்தை என்பதை நாம் பிரித்துப் பார்க்ககூடாது. நடைதான் நடத்தையாகிறது.
- நம்மைப் பெற்ற தாய் தந்தையரிடம் மட்டும் எந்தப் பொய்யும் சொல்லக்கூடாது. மற்றவர்களிடம் சொல்ல்லாமா என்றால் சில சமயங்களில் அந்த நிலை ஏற்படும்.
- நாட்டைக் காப்பாற வேண்டிய இளைஞர்கள் நல்ல கட்டுப்பாடுகளைக் கொண்டு விளங்க வேண்டும்.
- நாம் எந்தக் காரியங்கள் செய்தாலும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.
- நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதைவிட கேட்டுத் தெரிதல் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
- சமத்துவம் என்பதற்கு முன்னால், உள்ளத்தில் சமநிலை ஏற்படவேண்டும்.
- சாதிகள் தேவையில்லை; மதப்பிரச்சினை தேவையில்லை; மனிதர்களாக நாம் வாழ வேண்டுமென்றால் சாதி, மதப் பிரச்சினைகளை வைத்துப் பேசக்கூடாது.
- மனிதனின் கஷ்டம் தீரவேண்டுமென்றால் புனிதப் பணிகள் செய்ய நாம் ஒன்றுபட்டாக வேண்டும்.
- தேசம் என்றால் அதன் உறுப்புகள் எல்லாம் நல்லபடியாக இருக்க வேண்டும். ஒரு பக்கம் வறுமை ஒரு பக்கம் வளமை என்ற நிலை கூடாது.
- நல்ல பணிகளுக்கு நாம் செலவு செய்யத் தாராளமாக முன்வர வேண்டும்.
- நமது முன்னோர் பெரும் தியாகம் செய்து விடுதலையை நமக்குப் பெற்றுத் தந்தார்கள். இந்த விடுதலை நமக்கு நிலைத்து நிற்க நாட்டு ஒற்றுமைதான் முதல் தேவை.
- மதம், சாதி, இனம் இவற்றின் பெயரால் தீய சக்திகள் ஒற்றுமையைச் சிதைத்து வருகின்றன. இத்தீய சக்திகளை எதிர்த்து உறுதியுடன் போராடுவோம்.
- நாட்டு ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பவர்கள் மக்களின் விரோதிகள். அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கித் தள்ளுவோம்.
- அளவிலும், எண்ணிக்கையிலும் உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமின்றி உயர்ந்த தரமுள்ள பொருள்களை உற்பத்தி செய்வதை நமது தேசியக்கடமையாக்க் கொள்ள வேண்டும்.
- சாத, மத, இன பேதங்களையெல்லாம் கடந்து நின்று தமிழக மக்கள் கொண்டாடும் தனிச்சிறப்புடைய திருநாள் பொங்கல் திருநாள். உழவரும் பிற துறைகளில் உழைப்போரும் ஒன்றுகூடி உழைப்பால் விளைந்த செல்வங்களைப் பகிர்ந்து உண்டு மகிழும் திருநாள் இது.
- மனித வள மேம்பாடு என்பது குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதால் குழந்தைகள் மதிய சத்துணவுத்திட்டம் தொடங்கப்பட்டது.
- நமது பணிகளில் தாமதம் கூடாது. நமது பயணத்தில் தயக்கம் இருத்தலாகாது. நமது உழைப்பில் குறைபாடு இருத்தல் ஆகாது.
- சின்னஞ்சிறு பிரச்சினைகளைப் பெரிது படுத்தி மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறு விளைவிக்க எவர் முயன்றாலும் அவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
- வாழ்வின் சுவை எதையும் அறியாதிருக்கிற, லட்சக்கணக்கான நலிந்தோருக்காக, வருங்காலத் தலைமுறைக்காக இப்போதே இன்றே ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற துடிப்பு எல்லோரிடமும் இடம்பெற வேண்டும்.
- விதை செத்துத்தான் பயிர் முளைக்கும். விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை அப்படியே நாம் உண்டுவிட்டோமானால் பயிர் கிடையாது. அதைப்போல உற்பத்தியாகிற செல்வம் அவ்வளவையும் இந்தத் தலைமுறையில் தின்று தீர்த்துவிடுவதென்றால் அடுத்த தலைமுறைக்கு மிச்சம் எதுவும் இராது.
- நாம் உழைக்கிற உழைப்பு நம்முடைய நல்வாழ்வுக்கு மட்டுமல்ல. வருங்கால தலைமுறைக்காகவும் உழைக்கிறோம். நாம் இந்துத் தலைமுறையில் சில சங்கடங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத் தேசியக் கடமையாக ஒவ்வொரு வரும் கருத வேண்டும்.
- மாற்றங்களின்றி முன்னேற்றமில்லை; முன்னேற்றமில்லையேல் வரலாறு இல்லை. மாறுதல் என்பது சிறப்பாக அமையும் போதுதான் அதுவே முன்னேற்றத்திற்கான சீரான பாதையினையும் அமைத்துக் கொடுத்துவிடுகிறது. சமூக முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை எளிய மக்களுக்குக்குக் கிடைப்பது அவசியம்.
- பதட்டத்தோடு எந்த முடிவுக்கும் வராமல் ஆராய்ச்சி அறிவோடு ஆழ்ந்து அமைதியாகச் சிந்தித்தால் என்றும் வெற்றி கிட்டும்.
- அகமும் புறமும் ஒன்றுபட்டு இயங்க்ப்பகுத்தறியும் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அதைப் பயன்படுத்தத் தவறுவதனாலேயே மக்களிடையே மாறுபட்ட தன்மைகள் இடம்பெறுகின்றன.
- ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நாம் போக வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அப்படிப் போவதற்கு ஏற்ற பாதை வேண்டுமல்லவா? பாதையே இல்லாத பகுதியில் அடியெடுத்து வைத்து அல்லற்பட்டு நடந்து மற்ற இடத்தை அடையவும் கூடும். ஏன் மலைமேல் ஏறி இறங்கிப் போகலாம். காட்டுவெளிகளில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து செல்ல்லாம். தண்ணீரில் நீந்தியும் செல்ல்லாம்! ஆனால் இப்படிப் போய்ச் சேருவதற்கெனத் தேர்ந்தெடுக்கும் பாதைகள் ஒழுங்கற்றவைகளாக இருப்பதால், பாதசாரிகளுக்கு அந்தப் பாதைகள் தொல்லைகளையும், இடர்ப்பாடுகளையும் உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை; மகிழ்ச்சி தேவை; இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடை இல்லாமல் இருப்பதுதான்.
- சமுதாயத்தின் கட்டுப்பாடுகள், ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் கட்டுப்பாடுகளாக அமைய வேண்டும்.
- தன்னலம் தேவைதான். ஆனால் அது பொதுநலமகப் பரிணமிக்க வேண்டும்.
- எனக்கு என்ற எண்ணம் வராமல் நமக்கு என்ற எண்ணம் வரவேண்டும். அப்படிப் பட்ட எண்ணம் வளர்ந்தால் நாட்டில் ஒற்றுமை வளரும். சாதிக் கொள்கை ஒற்றுமையை ஏற்படுத்தாது. மத்த்தில் பெயரால் தூய்மை தெரியவில்லை. தாழ்வு தான் தெரிகிறது. இத்தகைய சாதி உணர்வுகளை அகற்றச் சூளுரை ஏற்போம்.
- மொழி, இனம், கலாச்சாரம், நாகரிகம் போன்றவற்றை மக்களை ஒன்று சேர்ப்பதற்கும் சமுதாயத்தை உயர்த்துவதற்கும் மேம்மைப் படுத்துவதற்கும் பயன்படவேண்டும். இந்த உயரிய குறிக்கோள்தான் தமிழ்ச் சமுதாயத்தின் குறிக்கோளாகும்.
- முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாக விளங்கும் சக்திகளை நமது ஒற்றுமையாலும், உழைப்பாலும் முறியடிக்க அனைத்துப் பிரிவினரையும் அழைக்கிறேன். வறுமைக்கும், அறியாமைக்கும், சமூகத் தீமைகளுக்கும், பிளவு மனப்பான்மைகளுக்கும் எதிராக நாம் தொடங்கியுள்ள ஆக்க வழி, அற வழி புனிதப் போரின் வெற்றிக்கு நம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ள உத்வேகம் பெறுவோம்.
- நமது மாநில மக்களை முன்னேற்றுவது இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பக்கபலமாக நிற்பது என்கிற புனிதக் குறிக்கோள்களை நோக்கி நமது லட்சியப் பயணம் அமைந்திருக்கிறது. ஆனால் இந்தக்குறிக்கோள்களுக்கு கூடத் தடைகள் ஏற்படலாம் என்பதை வரலாறு காட்டுகிறது.
- உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளி விடுவீர். உழைப்பவரே உயர்ந்தவர் எனும் தத்துவத்தை நிலை நாட்டுவீர்! புதிய சமதர்ம சமத்துவச் சமுதாய அமைப்புக்கு முன்னேறும் சக்தியாகத் தலைமை தாங்கிடுவீர்.