1. பாட்டும் – நடிப்பும்

நாடகம் என்பது நடிப்பும் – பாட்டும் ஆகும். அதுவே கூத்து. சிலபத்திகார் கூறும் சாந்திக்கூத்து மற்றும் வினோதக் கூத்துகள் பாடல் கலந்து ஆடப்பெற்றவைகளே என்பதை மூன்றாம் இயலில் விரிவாகக் கண்டோம். கதை தழுவாது பாட்டின் பொருள்பற்றி அபிநயிக்கும் கூத்து ‘அபிநயக்கூத்து’. ஒரு கதையைத்தழுவி நடிக்கும் கூத்து ‘நாடகக்கூத்தாகும்.

ஆக, திரைப்படம் என்பது நம்மைப் பொறுத்தவரை ‘அபிநயமும் – நாடகமும் இணைந்து ‘நாடகக்கூத்து’ என்ற பெயர் கொண்ட ஒன்று என்று கொண்டால் தவறாகாது.

உலகின் முதல் நாகரீகம் கண்டவன் தமிழன் என்ற இறுமாப்புடன் மகிழ்ச்சியுடனும், இசையிலும் பாட்டிலும் சிறந்தவன் தமழனே எனக் கூறலாம். சிலப்பதிகாரக் காலத்தில் தனித்தமிழ் இசை வழங்கியது. அவ்வாறே, கடைச் சங்கத்தில் நாட்டியக் கலை அடைந்திருந்த பெருமையை சிலப்பதிகாரத்தின்’ ‘அரங்கேற்றுக்காதை’ நன்கு விளங்கும்.

நடனமாதின் இலக்கணம், ஆடலாசிரியன் அமைதி, இசையாசிரியன் அமைதி, முழவாசிரியன் அமைதி, முழலோன் அமைதி, அரங்கின் அமைதி, கூத்திலக்கணம் ஆகியவற்றை அரங்கேற்றுக் காதை விளக்குகிறது. அமைதி என்ற சொல்லுக்குத் தன்மை என்று பொருள்.

“உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற ஐயா” என்று இறைவனை வாழ்த்துகிறார் மாணிக்கவாசகப் பெருமாள். அந்த ஓங்காரத்தின் விரிவே நாதயோகமான இசைக்கலை. உயிரும் உலகும் நாதக் கடலிலே மிதக்கின்றன. ஓமே எல்லாம்ந அதுவே உள்ளொலி; அதனின்றும் சத்தம் பிறந்தது; அதனின்று எழுத்து; அதனின்று சொல் தொடர்; மொழிகள், நூல்கள், காவியம், சங்கீதம் எல்லாம் உண்டாயின.

கீதம், வாத்தியம், நிருத்தம் (நடனம்) ஆகிய மூன்றும் சேர்ந்தது சங்கீதம்.

நாததிலிருந்து இசையொலி (சுருதி) இசையொலியிலிருந்து இசை (ஸ்வரம்); இசையிலிருந்து பண் (இராகம்); பண்ணிலிருந்து பாட்டு(கீதம்) உண்டாகிறது.

சங்கீத்ததிற்கு தாய் இசையொலி; (சுருதி அல்லது அலகு); தந்தை தாளம் ஆகும்.

ஆன்மாவிலிருந்து பாட்டு வருகிறது. அதுவே பொறிகளை (காணங்கள், இந்திரியங்கள்) ஏவி, ஒரு தீயை, ஓர் ஆர்வத்தை உண்டு பண்ணுகிறது. அந்த ஆர்வத் தீ காற்றை உந்துகிறது. காற்று, நாபி, இதயம், பண்டம், உச்சி, மூக்கு, இதழ், நா, பல், அண்ணம் (உண்ணாக்கு, மேல்வாய்) இவற்றைத் தொழிற்படுத்துகிறது. அதனால் உயிர்மெய் ஆகிய எழுத்துக்கள் உண்டாகின்றன.

உயிரெழுத்துக்களும், இடையின எழுத்துக்களும் கழுத்திற் பிறக்கும். மெல்லெழுத்துக்கள் மூக்கையும், வல்லெழுத்துக்கள் மார்பையும் இடமாகக் கொண்டு பிறக்கும். எழுத்துக்கள் அளபெடுத்து ஆலாபனமாய் நீண்டு இசையாகிப் பண்ணாகும்.

நெஞ்சு, கழுத்து, நாக்கு, மூக்கு, மேல்வாய் (அண்ணம்), உதடு, பல, தலை ஆகியவை நாதம் பிக்கும் எட்டுப் பெருந்தானங்களாகும் (இடங்கள்)

எனவே, பாட்டு நம் திரைப்படங்களில் இடம் பெறுவது நமது கலாச்சாரத்தின், இலக்கியத்தின் நீண்ட வரலாற்றுப் பின்னணியோடு பிணைந்த ஒன்று. பாட்டு பிறக்கும் இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எதனை அடிப்படையாகக் கொண்டு பாட்டுபிறக்கிறதோ அவ்வாறு பிறந்த பாட்டு அந்தச் சூழலில் பாடப்படுவது இயல்பான ஒன்றா என்ற ஆய்வுக்குள் செல்லாது இடம் பெற்ற ஆடல் காட்சிகளில் நடிகர்திலகத்தின் நடிப்பிலக்கணத்தை எவ்வாறு வரையறை செய்து தர வேண்டும் என்பதே நோக்கம்.

பாடகன்

பண்டைய நிருத்தங்களில், கூத்துகளில் பாடகன் ஒருவன் இசைப்பதற்கென்றே இருந்திருக்கிறான் என்பதை சிலப்பதிகாரத்தின் ‘அரங்கேற்றக் காதை’யிலிருந்து நம்மால் அறிய முடிகிறது அவன், யாழ், குழல், தாளம், ணீர், வாய்ப்பாட்டு, சன்னக்குரலுடன் அமைப்பாக வாசிக்கும் மத்தளம், முன்னே சொன்ன கூத்தின் வகை – இவற்றுடன் இசைந்த பாடலை இனிமையாக, இசையொலி (சுருதி) தாளங்களுடன் (லயம்) பொருந்தப் பாடவேண்டும். வரிப்பாட்டிற்கும், ஆடலுக்கும் உரிய பொருளை இலக்கி (விளக்கி) இயற்சொல், திரிசொல், திசைசொல், வடசொல், ஆகிய சொற்களின் ஓசைகளைச் சுத்தமாகக் கடைப்பிடித்து, அந்த ஓசையின் இலக்கணங்களையெல்லாம் குற்றமறத்தெரிந்த அறிவாளியாயிருக்க வேண்டும் பாடகன், என்பது இசையாசிரியன் தன்மை.

ஒவ்வொரு நடிகனுக்கும் ஏற்றபடி தன் குரலை மாற்றி மாற்றிப் பாடிய ஒரு பாடல் கலைஞனைக் கூடத் தமிழகமேதான் கண்டிருக்கிறது ஒரு பாடல் சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த மதுரையிலே பிறந்த டி.எம். சௌந்தர்ராஜன் என்ற திரைப்படப் பாடகர். ஆரம்பகாலங்களில் இவர் தம் வளமான – இனிமையான – காந்தம் போன்ற குரலால் பொதுப்படையாகப் பாட ஆரம்பித்தாலும் நடிகர் திலகதின குரல் வளமும், இவரின் குரள்வளமும் ஒன்றாக அமைந்தது விந்தையிலும் விந்தை. ச்ற்று மிகைப்படுத்திச் சொல்வதென்றால் இப்படித்தான் சொல்ல வேண்டும். இவர் குரலால் நடித்து நடிகர் திலகத்தை உடலால் நடிக்கச்செய்தார். பாடலுக்கு நடிப்பது என்ற பகுதியில் இருவரையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதென்பது இயலாத செயலாகும்.

மேலும் இவர் மட்டுமல்ல. சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன், சந்திரபாபு, கண்டசாலா, ஏ.எம். ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், மலேசியா வாசுதேவன், என்ற தமிழகத்தின் அருமையான பாடற் கலைஞர்களின் பாட்டுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவரவர்களின் குரல்வளத்திற்கேற்ப, தன் முகத்தோற்றத்தை மாற்றி மாற்றி நடித்திருக்கிறார்.

இவருக்குப் பின்னும், இவர் திரையுலகில் சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருந்த காலங்களிலும், பாட்டுக்கு ஏற்ப வாயை அசைப்பது, பாடலின் பொருளுக்கேற்ப, காட்சியின் தன்மைக்கேற்ப நடிக்கும் நடிகர் எவரும் இன்னும் தோன்றவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவ்வகையான நடிப்புத்திறனை ஒரு நடிகன் வெளிப்படுத்த உதவும் வண்ணம், இப்பொழுதெல்லாம் காட்சிகளும் அமைக்கப்படுவதே இல்லை. பாடலை உருவாக்கும் போதே இது வாயசைப்பிற்கு அல்ல, இது வாயசைப்பிற்கு என்று இருவகைப் பாடல் கட்சிகளைப் பிரித்துவிட்ட நிலையில், இது வாயசைப்பிற்உக (For Lip Movement) என்று உருவாகும் பாடல்களே தற்போது இல்லை என்று திட்டவட்டமாகக் கூறலாம்.

கல்தோன்றாக்காலத்தே முன்தோன்றினாலும், கண்டகண்ட மொழிகளின் பாதிப்புக்கு ஆளாகி கன்னித் தமிழாகவே இருந்துவரும் நம் தமிழுக்கு, சமீபகாலமாக திரைப்படங்களின் மூலம், அதன் பாடல்களில் மூலம் , ஆங்கிலேயர் நம்மை அடிமை கொண்டிருந்தபோது கூட அடிமையாகாத தமிழும் – அதன் கவிதையும் இன்று ஆங்கில மயமாக்கப்பட்டு வருவது ஆபத்தானது என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொள்வர்.

தமிழ் அதன் இளமை, அதன் இனிமை உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதில் எந்தத் தமிழரும் ஆர்வமே கொள்வர். ஆனால் ஆர்வம் என்பது தவறானு முறையைத் தேர்வுசெய்யும் முறையாக அமைந்துவிடக்கூடாது.

ஒரு மொழியை, அதன் இலக்கியத்தை, அதன் இசையை அதன் இயல்பான வழியில் நின்று பேசி, படித்துப்,பாடினால்தான் அது அம்மொழிக்குச் செய்யும் பெருமையாகும். மாறாக, ஒரு மேலைநாட்டு தாளகதியில் (Rhythm) நம் தமிழ்ப்பாடலொன்றை அமைத்து, அதை வேற்று மொழியினர் எளிதாகப் பாடக் கொற்றுவிடுகின்றனர். என்று வைத்துக்கொள்வோம். அது…. ‘பார்த்தீர்களா என் இசையால் உலக மக்கள் அனவரும் நம் தமிழைப்பாடும் வண்ணம் செய்துவிட்டேன் என்று பெருமை பேசினால் அதனினும் அறியாமை, அறிவீனம் வேறொன்றுமிருக்க முடியாது. மாறக தமிழை இப்படித்தான் பேசவேண்டும் – பாட வேண்டும் போலிருக்கிறது’ என்று எண்ணி புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுபவனுக்கு, அது ஒரு தவறான வழிகாட்டுதலாகும்.

இந்த நிலையில், பாடல் காட்சிகளிலும், தொல்காப்பியம் கூறிய ஒன்பான் சுவைகளின் வழியே பாடல் வடிவங்கள் நடிகர்திலகம் எவ்வாறு உருவாக்கித் தந்துள்ளார் என்பதைக் கண்டு வழங்கினால் எதிர்காலக் கலைஞர்களுக்கு அதுவே ‘இலக்கணமாக’ அமையும்.

1. நகைச்சுவைப் பாடல் நடிப்பு

அ. எள்ளல் (பிறரை இகழ்ந்து பாடல்)

தன் ஒரே தங்கையின் திருமணம், தாய்நாட்டைக் காணப்போகிறோம் என்ற தனியாத ஆவலில் கனவுகள் தரைமட்டமாகிப் போகின்றன. படுக்க இடமும் பசிக்கு உணவும் தர மறுக்கிறது பாசமுள்ள தாய்நாடு. ஏமாற்றுபவனுக்கு இடமென்று தெரிந்து கொள்கிறான். பைத்தியக்காரனாக வேடம் புனைந்து தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறான். அப்போது பிறக்கும் பணம் பற்றிய பாடலில் பணம் என்று அலைவோரை எள்ளி நகையாடுகிறான். பாடல்மூலம். அது…

“தேசம் ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி – குதம்பாய்
காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் – தேசத்தில்
காசுக்குப் பின்னாலே ….
……………………………………” என்று

கேலி செய்யும் பாடலில், அப்பாடலின் ஒவ்வொரு வரியின் பொருளும் அவன் முகத்தில் அவ்வப்போது மாறிமாறத் தோன்றி மறையும். நடிகர் திலகத்திற்கு முதன் முதலில் குரல் கொடுத்துப் பெருமை பெற்றவர். சிறந்த இசையறிஞரான சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன்

அவ்வாறே……

“சாப்பாடு இல்லாம தவிக்குதுங்க
ஜனம்
கூப்பாடு போட்டுமனம் குமுறுதுங்க
உயிர்
காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க
என்றால்
தாப்பாளைப் போடுறாங்க பாருங்க
அந்தச் சண்டாளர் ஏங்கவே
தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க
ராகம் கா.. கா….”

இப்பாடல்களையும், கதை – வசனத்தையும் தந்தவர் கலைஞர் மு. கருணாநிதி – படம் பராசக்தி (1952).

ஆ. இளமை

(இளமை கண்டு எள்ளல்) தன்மை ஒரு ஓட்டுநர் எனத் தவறாகப்புரிந்து கொண்ட பெண்ணை அவள் அறியாமையை எண்ணி அவள் இளமையை (அறிவு முதிரா தன்மையை) எள்ளிப் பாடும் பாடலின் வடிவத்தை அன்னை இல்லம் (1963) படத்தில்,

“நடையா – இது நடையா
ஒரு
நாடகமன்றோ நடக்குது
இடையா – இது இடையா
அது
இல்லாத்து போல் இருக்குது(நடையா)
……………………..

என்ற பாடலில் காணலாம். கண்ணதாசனின் கவிதை இது. குரல் தந்தவர். டி.எம். சௌந்தர்ராஜன்.

இ. பேதமை (அறிவின்மை)

சட்டாம்பிள்ளையின் மகன் விரித்த வலையில் விழுந்த அரண்மனைப் பெண்கள், நடுராத்திரியில் கோவிலுக்கு வந்து அவனுக்காகக் காத்திருக, அவர்கள் அறியாமையை எண்ணி எள்ளிப்பாடும் பாடல் தூக்குத்தூக்கி (1954)யில் டி.எம். எஸ். குரலில் –

“ஏறாத மலைதனிலே
ஜோரான கௌதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து
ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
ததிங்கிணத்தோன் தாளம் போடுதய்யா.

தொகையறா

கல்லான உங்கள் மனம்
கனிஞ்சு நின்று ஏங்கையிலே
கண்கண்ட காளியம்மா
கருணைசெய்வ தெக்காலம்.?!

கோமாளி உடையுடன் , தனது குண்டு குண்டான கண்களை உருட்டி உருட்டி பாடலுகேற்றவாறு ஒரு சின்ன நடனமு ஆடும் இடமே பேதமையின் பாடல் வடிவம்.

ஈ. மடன் (தன் மடமை பற்றித் தோன்றுவது)

தற்கொலைக்கு முயன்றவனைத் தடுத்து நிறுத்தி ‘வாழ நினைத்தால் வாழலாம். ஆசையிருந்தால் நீந்திவா’ என்று அழைத்தவளின் காதலுக்குத் தந்தை ஒரு தடையாக இருக்கிறார். வீரம் விவேகம், கலையில் விற்பன்னாக உள்ளவனுக்கே தன் மகள் என்ற தந்தை, சங்கீதப் போட்டியில் தன்னோடு பாட அழைக்கிறார்.

“நீயே என்றும் உனக்கு நிகரானவன்” – என்று பாட்தொடங்கி அவர் இசையில் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடி அவரை மகிழ்விக்கிறாள். அவர் தந்தையின் இசை வெறியைக் கண்டவன் பாடப்பாட தன் தலையில் அடித்க்கொள்கினாற் பாண்டியன்; தன் மடமையை எண்ணி. நடிகவேள் எம்.ஆர். ராதா நடிகர் திலகத்திற்கு இப்பாடல் காட்சியில் துணையாக வருவது பலேபாண்டியாவில். (1962).

2. அவலச் சுவை பாடல் நடிப்பு

அ. இளிவு (இகழப்பட்டதால் வந்தது)

‘பறவைகள் பலவிதம் – அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்’ எனப் பாடித்திரிந்தவனின் பார்வையில் மாடப்புறாவொன்று படுகிறது. மணமாலை சூட்டுகிறேன் என்கிறான். கறை படிந்த உன் காதலைக் குப்பையிலே போடு என்கிறான். ஆனால் உண்மையான மனமாற்றத்திற்கு உள்ளனவன், தான் திருந்தி வாழ மாடப்புறாவை மனையாளாக்குமாறு பெற்றவளை வேண்டுகிறான். மகனின் வாழ்வை எண்ணி, விரும்பாத அவளை மகனுக்குமணம் முடித்து வைக்கின்றனர். ஆனால் அவள் உள்ளமோ அவன் கடந்த காலக் கறைபடிந்த வாழ்வை எண்ணி எண்ணி இகழ்ந்து அவனோடு ஒட்டாது உறவாடாது வாழ்கிறது. வீணானது வாழ்வு என்று விழிநீர் சிந்துகிறது மாடப்புறா. முற்றிலுமாக மாறிய கணவன் கேட்கிறான்……

“ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கு
நன்றி சொல்லவோ அழுதாய்.!…ஆனவரை சொல்லி விட்டேன்
அழுதழுது பார்த்து விட்டேன்
தாய்மொழியில் வார்த்தையில்லை
வாய்மொழிக்கும் வலிமையில்லை. (ஏனழுதாய்)

என்வழக்கில் சாட்சியில்லை
எனதுபக்கம் யாருமில்லை
சட்டம் தரும் சலுகைகூட
சமுதாயம் தரவில்லையே!…..(ஏனழுதாய்)
………………..”

என்று மனைவியின் இகழ்ச்சிக்கு ஆளானதை எண்ணிப் புலம்பும் இச்சுவையின் வடிவம், இருவர் உள்ளம் (1963) படத்தில் கண்ணதாசன் கவிதையை டி.எம். எஸ். குரலில் பாடுகையில கிடைக்கும்.

ஆ. இழிவு (உயிராவது பொருளாவது இழத்தல்)

கட்டிய மனைவியைத்தவிக்க விட்டு, பரத்தையின் பஞ்சணையில் படுத்துப் புரண்டு, முடிவில் கண்ணைப் பறிகொடுத்து விட்டு வந்து கட்டிய மனைவியின் காலடியில் விழுகிறான். மனைவி தவிக்கிறாள்.

தொகையறா

“ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக்கொன்றவன் நான்
அவள்
இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தைக் கொன்றவன் நான்
வாழத்தகுந்தவனை வாழாமல் வைத்துவிட்டு
பாழும் பரத்தையினால் பண்பதனைக் கொன்றவன் நான்
அந்தக் கொள்கைக்கே ஆளாய் இருந்து விட்டேன்
இனி
எந்தக் கொலை செய்தாலும் என்னடி என் ஞானப் பெண்ணே!

பாடல்

“தவறுக்கும் தவறான தவறைப் புரிந்து விட்டு
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
பதறிப் பதறி நின்று கதறிப்புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே”

(“ஐயோ… அத்தான்! உங்கள் கண்கள் எங்கே அத்தான்… எங்கே?” கதறுகிறாள் மனைவி.)

“கண்ணைக் கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி
மானே வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டி”

– என்று கதறிப்புலம்பும் வடிவத்தை மக்கள் கவிஞன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதைவரிகளுக்கு சி.எஸ். ஜெயராமன் குரல்கொடுக்கும் தங்கப்பதுமை (1959)யில் காணலாம்.

இ. அசைவு (தளர்ச்சி)

தாயோடு அறுசுவை போகும்;
தந்தையோடு கல்வி போகும்
சேயோடு இன்பம் போகும்;
நல்ல
மனைவியோடு எல்லாம் போகும்!;

மனைவி இறந்துவிட்டாள். மகனோ குற்றவாளி தானோ…. கடமையே கண்ணெனக்கருதும் காவலதிகாரி. அடிமேல் அடி விழுந்தால் ஆடாதார் யார்?

“சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால்
தாங்காதுபூமி (சோதனை)
…………………………………………….
…………………………………………….
தானாடவில்லையம்மா சதையாடுது
அது
தந்தையென்றும் பிள்ளையென்றும் உறவாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பதை
அதற்குள்
பூநாகம் புகுந்துகொண்டு உறவென்றது
அடிதாங்கும் உள்ளமிது இடிதாங்குமா
இடிபோல பிள்ளை வந்தால் மடிதாங்குமா”

வீரமான உள்ளத்தின் தளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டும் வரிகள், குரல் வளம், குணச்சித்திர நடிப்பு. கண்ணதாசன், டி.எம். எஸ். கணேசன் இவர்கள் பின்னணியில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இணைந்தளித்த இவ்வடிவம் தங்கப்பதக்கம (1974).

ஈ. வறுமை(பொருளின்மை)

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், நடிகர் திலகம் வறுமையில் வாடும் நாயகனாக வேடமேற்றது ஒன்றிரண்டு படங்கள்தான். செல்வம். அதன் மதிப்பு குறித்து தன் மகனை முன்னிலைப்படுத்திப் பாடி வறுமையை வெளிப்படுத்திய வடிவம் ‘நான் பெற்ற செல்வம்’ (1956) படத்தில் கிடைக்கும். பாடலுக்குக் குரல்தந்தவர் டி.எம்.எ. , பாடல்,

“வாழ்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா.(வாழ்ந்தாலும்)
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
தாழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது போனால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்”

காதல் வேதனையில் தோன்றும் அவலம்

குடியும் – கூத்துமாக இருந்த ஜமீன்தார் வீட்டு பிள்ளையை நிமிரச் செய்கிறாள் ஒருத்தி. அவளுக்காக ஒரு வசந்த மாளிகை கட்டுகிறான். அவளோடு வாழும் நாளின் வரவுக்காகக் காத்திருக்கிறான். வந்ததோ பிரிவு. மாற்றான் ஒருவனுகு மாலையிட ஏற்பாடுகள் நடக்கின்றன. மனம் உடைது போனவன் மறுபடியும் ம்துவுக்கள்ர மங்கையின் மணநாள் வருகிறது. மறைந்து மறைந்து வந்து அவளை ஒரு முறை பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். வந்தவளும் அவன் வாழ்த்துக்காக காலில் விழுகிறாள். எல்லாம் முடிந்தது என்று எண்ணி இரும்பாகிறது அவன் இதயம். மாளிகைக்கு வருகிறான். மரண தேவதையை அழைக்கிறான்? இந்த மாளிகை இனி யாருக்காக? என்று கூறுகிறான். உயிரைவிட்டுப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.; உயிர் கொடுக்கிறார் காட்சிக்குக நடிகர் திலகம். காதலின் சோகம் அதன் கனமான வடிவம் கொண்டு வெளிவருகிறது.

“யாருக்காக… யாருக்காக?யாருக்காக…
இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக…..

காதலே! போ…..போ…..
சாதலே! வா…..வா…….
மரணம் என்னும் தூது வந்தது
அது
மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்க்கமாக நான் நினைத்தது
வெறும்
நரகமாக மாறிவிட்டது.(யாருக்காக)
……………………………………….
………………………………………..
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கமில்லாதவளென்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரனென்று
ஹ்ஹ்ஹா……………………………”

‘தேவதாஸ்’ ஒரு மென்மையான உள்ளத்தின் காதலை, அதன் முடிவைச் சொல்லும் படம் என்றால், வசந்தமாளிகை (1972) முரட்டு உள்ளத்தின் காதலைச் சொல்லும் காவியம்.

காதலியின் வேதனை கண்டு வந்த அழுகை

Those who love each other love at first sight – ஒருவரையொருவன் விரும்பும் காதலில், காதல் என்பது அவர்கள் சந்திப்பின் முதல் பார்வையிலேயே உருவாகிறது – என்றான் ஆங்கில மகாகவியான ஷேக்ஸ்பியர் தனது ‘As you like it’ என்ற நாடகத்தில் .

இதையே…….

“அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்”

என்று அவருக்கும் முற்பட்ட காலத்திலேயே காதலைப் பற்றி, அதினினும் சுருக்கமாகச் சொன்னவன் தமிழ்க் கவிஞனான கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

அவ்வாறு…..

மதுரை அழகர் கோவிலில் முதன்முதலாகச் சந்திக்க நேர்ந்த போதே கலைஞர்களான் இருவரும் ஒருவரையொருவர் விரும்பினாலும் அவர்கள் காதல் மூடுமந்திரமாகவே இருந்து வருகிறது. அது சற்று வெளிப்படும்போது சந்தேகம் என்னும் பேய் வந்து சதிராட, கடல் கடந்து கண்காணாத தூரத்துக்குப் போய் விடலாம் எனக் காதலன் கருதும்போது, அவனைத் தடுத்து நிறத்த போட்டிக்கு அழைக்கிறாள் காதலி. போட்டி நடக்கிறது. வெற்றி தோல்வியின்றி சம்மாக முடியும் போது சதிகாரனொருவனால் கத்தியால் தாக்கப்பட்டு இடது கையை இழக்கும் நிலைக்கு வந்து, பன் காப்பாற்றப்படுகிறான். மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்றவன் நிலை என்ன என்று அறியமுடியாத பேதை உள்ளம் புலம்புகிறது.

இந்த நிலையில் அந்த இருகலைஞர்களும் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சிக்கு ஒருவர் மீண்டும் ஏற்பாடு செய்கிறார். தன் உள்ளம் நிறைந்தவனைக் காணப்போகிறோம் என்ற துடிப்பி அன்னை போட்ட அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதுபோல நடிக்கிறாள், அவனைக் கண்ணால் கண்டால் போதும், தன் கலக்கம் தீர்ந்துவிடும் என்ற ஒரே நம்பிக்கையில்.

அந்த நாளும்,,, நேரமும் வருகிறது. கலை நிகழ்ச்சி துவங்குகிறது. மேளங்கள் முழங்குகின்றன. மத்தளங்கள் கொட்டப்படுகின்றன. திரைச் சீலையைத் தள்ளிக்கொண்டு ஆடவரும் அந்த மயில், மேகத்தைப் பார்த்துச் சாடையில் ‘நலமா? என முத்திரை பிடித்துக் காட்டிக் கேட்கின்றது. மேகமோ கண்சிமிட்டி குறும்பு செய்து தன் நலத்தைத் தெரிவிக்கின்றது. நாட்டியப் பாடலிலே,

“நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா? (நலந்)
நலம்பெற வேண்டும் நீயென்று
நாளும் என்நெஞ்சில் நினைவுண்டு
இலைமறை காய்போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று(நலந்)கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நான்றியேன்
புண்பட்ட சேதியைக் கேட்டவுடன் – இந்தப்
பெண்பட்ட பாட்டை யாரறிவார்……”

என அவள் கலங்க நாகசுரம் வாசிக்க வாசிக்க அவன் கண்களில் கண்ணீர் துளிர்க்க, பக்கவாத்தியக்கார்ரான தவில்கார்ர் அவன் தொடையை ஆறுதலாய் தடவிக்கொடுக்க, காதல் வேதனையை, அதன் வடிவத்தை வெளிப்படுத்தும் – காதல் வயப்பட்ட உள்ளங்களையெல்லாம் சுண்டி இழுத்து கண்களைக் குளமாக்கும் கவின்மிகு காட்சியல்லவா அக்காட்சி?! தில்லானாமோகனாம்பாள் (1968) திரைக்காவியத்தின் ஒருதுளி இது. தவில்கார்ராக, நண்பானாக, அண்ணனாகத் துணைநிற்பவர், தமிழகம் தந்த மாபெரும் கலைஞர்களில் ஒருவரான டி.எஸ். பாலையா, பி. சுசிலாவின் குரலுக்கு நாதசுரம் தந்தவர்கள் மதுரை பொன்னுசாமி சகோதர்ர்கள்.

நடிகம் திலகத்தின் வாயசைப்பு என்பது நாகசுரம் வாசிப்பது போன்ற நடிப்பு. அந்த இசைக் கருவியைப்பற்றுவதிலும், சரி செய்வதிலும், மூச்சையடக்கி வாசிப்பது போன்று நடிக்கும் அந்த்ப் பாங்கும், கலைஞனின் கர்வமும் அந்தக் கண்களில் பளிச்சிடுவதைக் கண்டால், உண்மையான நாகசுரக்கலைஞன் கூடத் தானும் அதுபோல எடுப்பாக இருக்க வேண்டுமென விரும்புவான்.

உண்மையில் கூறப்போனால், தமிழக காவல்துறையில் இளைஞர்களும் – ஏனையோரும் மிடுக்காக உடையணியத் துவங்கி, அதற்கென தங்கள் கவனத்தைத்திருப்பியது 1974ல்; நடிகர் திலகம் ‘சௌத்ரி’ என்ற உயர்காவலதிகாரியாக ‘தங்கப்பதக்கம்’ படத்தில் வேடமேற்று நடித்த பின்புதான் என்று கூறினால் மிகையாகாது.

3. இளிவரற்சுவை (இகழ்ச்சி)

‘இழிப்பாவது குற்றமுடையவற்றைக் காணுதல் முதலிய காரணங்களாலே மனதில் தோன்றும் அருவருப்பு’ – என்ற தண்டியலங்காரவுரையின் வழிநின்றே இங்கும் இகழ்ச்சியின் வடிவம் வழங்கப்படுகிறது.

‘அவளோ கன்னிப்பெண். கள்ளங்கபடம் அறியாதவள். பேதமின்றி ஆண்களுடன் பழகும் தன்மை உடையவர். ஆனால் இழி குணம் படைத்தோர், அவளை இழித்தும் பழித்தும் பேசுகின்றனர். இந்த இலைஇல் தன் நண்பனுக்கு இவளை மணம் முடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஊரார் ஒரு வெள்ளைமனம் கொண்டவளை தவறாகப் பேசுவதைச் சகிக்காத தலைவன், அவள் கணம்பற்றி பாடும்போது, சமுதாயத்தின் அருவருக்கத்தக்க போக்கைச் சாடுகிறான். அது…….

“ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே குழந்தையம்மா(ஆயிரத்)
………………………………………….
ஆதாரம் நூறென்பது ஊர்சொல்ல்லாம்
ஆனாலும் பொய்யென்று நான் சொல்லுவேன்”

என்ற இடத்தில் வேட்டியை இருகைகளாலும் தன் முழங்காலுக்கு தூக்கியவாறு வாயசைத்து இகழ்ச்சியின் வடிவத்தைத் தருவது ‘கைகொடுத்த தெய்வம்’ (1964) படத்தில்; குரல் டி.எம்.எஸ்.

அவ்வாறே……

“தர்ம்மென்பார் நீதியென்பார் தரமென்பார்
சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச் சந்தயிலே எறிந்துவிட்டுத்
தன்மான விரமென்பார்
மர்ம்மய் சதிபுரிவார்வாய்பேச அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள் மேல் குற்றமென்பார்.

எனவே

இந்தத் திண்ணைப்பேச்சு வீர்ரிடம்
ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
………………………………………………
(திண்ணை)
பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினிலே அநேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம்
………………………………………………………..

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு
கஞ்சிக்கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு”

என்று இந்தச் சமூகத்தின் பொய்களை இகழ்ந்து பாடும் இகழ்ச்சியின் வடிவம் ‘பதிபக்தி’ (1958) யில் கிடைக்கும்; குரல் எம்.எஸ்.

4. மருட்கை (வியப்பு)

வியப்பு என்பது புதுமைகண்டும், மிகப்பெரியது கண்டும், மிகச்சிறியது கண்டும், மனித செயல்களினால் விளையும் அரும் பொருள்கள் கண்டும் பிறக்கும் என்ற தொல்காப்பிய உரையையும், ‘முன்னர் காணப்படாத ஒன்றைக் கொண்டு உண்டாகும் மனவிரிவு’ என்ற தண்டியலங்கார உரையையும் அறிவால் விளையாத்தே வியப்பு என்றும் கண்டோம்.

ஆனால் பாடல் வடிவங்களை தண்டியலங்கார உரையைவிட பேராசிரியரன் வழிநின்றே வழங்க வாய்ப்புகள் அதிகம்.

அ. புதுமை

இயற்கையின் படைப்பில் என்றும் புதமையானதும் – வியக்கத் தக்கதுமான பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுவே பெண்மையின் அழகு. எது அழகு என்பதில்மனிதனுக்கு கருத்து வேறுபாடு வரலாம். ஆனாலும் ஒரு பெண்ணின் அழகு என்பது புதுமைதான். அதனால்தான் பெண்ணின் அழகை ஆராய்ந்து பார்க்க இயலாது.

“அம்மா………..டி…………….
பொண்ணுக்குத் தங்க மனசு
பொங்குது சின்ன வயசு
கண்ணுக்கு நூறு வயசு – அவள்
சொல்லுக்கு நாலுவயசு….”

என்று பாடி தன் வியப்பை வெளிப்படுத்துகிறான். வியப்பின் வடிவம் வெளிப்படும் இப்பாடல் ‘ராமன் எத்தனை ராமனடி’ (1970)யில், டி.எம்.எஸ். குரலில் கிடைக்கும்.

ஆ.பெருமை

இயற்கையின் படைப்பில் செயற்றை அழகும் சேர்ந்து மயக்கம் தந்து, மதிமயங்கி வியந்து நிற்கும் மனிதன்,இயற்கையின் பேலெல்லையான காடு, மலை, அருவி இவற்றைக் கண்டு வியப்படையாடு இருக்க முடியுமா? இவையெல்லாம் எப்படி உண்டாயிற்று, யார் உண்டாக்கினார்கள் என்ற கேள்விக்கு விடைதெரியாது, முடிவில்,

“ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே
குற்றால
அழகை நாம் காண்பதற்க வண்ணக்கிளியே”

என வியந்து பாடுகிறான் மனிதன், வியப்பின் வடிவம் கிடைகக்உம் படம் பாவை விளக்கு (1960); குரல் சி.எஸ். ஜெயராமன். இதுவே பெருமை’ கண்டு தோன்றும் வியப்பின் வடிவம்.

இ. ஆக்கம் (செயலால் விளைவது)

தெய்வத்தின் கால் பட்டதும் கல் பெண்ணானதோ இல்லையோ, ஆனால் மனிதனின் கை பட்டும் கல் பெண்ணாவதென்னவோ கண்கூடான உணைம். கரடுமுரடான வடிவமுடைய கருங்கல்லானது, சிற்பக்கலைஞனின் கை வண்ணத்தால் அழகிய வடிவமுடைய பெண்ணாகி, அவனையே மயக்கி, வியப்புக்குள்ளாக்கும். அப்படி வியந்த கலைஞன்தான்-

“மலையே உன் நிலையை நீ பாராய்
கலைஞன் கை உளியாலே
காவியச் சிலையான
மலையே உன் நிலையை நீ பாராய்”

– என வியந்து பாடும் வடிம் வணங்காமுடி (1957) யில் கிடைக்கும்; குரல் சீர்காழி கோவிந்த ராஜன்.

5. அச்சம்

அச்சம் என்பது பேய், விலங்கு, கள்வர், தாய், தந்தை, ஆசிரியன், அரசன், வழிபடும் தெய்வம், தன்தவறு ஆகியவற்றால் விளையும் என்பது தொல்காப்பிய விளக்கம்.

இவ்விளக்கங்கள் அனைத்திற்கும் வடிவம் காணுதல் கடினம் என்பதின் காரணம் என்னவென்று இச்சுவையின் காட்சிகளில் வடுவம் தேடும் பகுதிய்ல கூற்ப்பட்டுள்ளது. அதே அடிப்படையில் பெண் பேய் (பைத்தியக்காரப் பெண்) மற்றும் தன் தவறுக்கான நிலைக்களத்திலிருந்து பிறக்கும் அச்சத்தின் வடிவங்களைக்காணலாம்.

அ. பேய் கண்டு

தன் காதலன் தன்னை ஏமாற்றிவிட்டானென்றும் அவனைப் பழிவாங்காது விடமாட்டேன் என்றும் விரைந்து போனவள் விபத்தில் மாட்டிக்கொண்டு, சுயநினைவை இழந்து பைத்திய்ம கிறாள். அப் பைத்தியக்காரப் பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படும்போது அங்கிருந்த கத்தியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மருத்துவரை ஆடவும் – பாடவும் சொல்லி அச்சுறுத்துகிறது. பயந்துபோன மருத்துவர்….

“Ok..Ok……
I wll sing for you
I will dance for you
ஆட்டமென்ன சொல்லு நீ – தோழி நான்
ஆடிடுவேன் கொஞ்ச நாழி! (I wll)”

– என்று பாட ஆரம்பித்து அச்சத்தில் கை, கால்கள் அபிநயக்க வராது ஆடும் இடத்தில் ‘பேய்’ கண்டது போன்ற அச்சத்தின் வடிவத்தைக் காணலாம். இது ‘மனிதரில் மாணிக்கம்(1973) திரைப்படத்தி, டி.எம்.எஸ். குரலில் கிடைக்கும்.

ஆ. தன் தவறுக்காக

ஆத்திரத்தில் மனைவியை ஒரேயொரு அடி அடிக்க சற்றும் எதிர்பாராது இறந்துவிடுகிறாள். அந்த மரணத்தை மறைத்து விடுகிறார். ஆனாலும் அந்தத் தவறு – அந்தக் கொலை அவன் நினைவைவிட்டு அகலாது சுற்றிச்சுற்றி வருகிறது. அச்சத்தால் அவன் நெஞ்சம் தவிக்கிறது. நிம்மதியின்றிப் புலம்புகிறான்.

“எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம்வேண்டும்(எங்கே)
………………………………………
எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது”

என அச்சத்தால் புலம்பும் வடிவம் ‘புதியபறவை’ (1964) யிலும்,

அதேபோன்று தன் மகளின் வாழ்வைக் கெடுத்தவனை ஒரேயொரு அடி அடிக்க, அவன் இறந்துபோக, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ஓடி, தன் நடை, உடை, பாவனைகளையெல்லாம் மாற்றிக் கொண்டு மீண்டும் அதே ஊருக்கே வந்து தன்னை வளர்த்தவரின் ஆசையை நிறைவேற்றும் செயல்கள் புரியும்போது, தன்னைச் சந்தேகிக்கும் நண்பனிடமிருந்து தப்ப முடியாது என்ற எண்ணமும், தன் மகளைத் தானும், தன்னை அவளும் அறிந்தும் ஒன்று சேர முடியாது சட்டத்தின் நெருப்புப் பார்வை தன்மீது பட்டுக்கொண்டேயிருக்க…. நிம்மதியிழந்தவன்,

“தேவனே! என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கிறோம் நீங்கள் அறிவீர்
Oh! My Lord! Please Pardon me
தாய்மடியிலே மழலைகள் ஊமையோ
நான் அழுவதா சிரிப்பதா தேவனே
நின் கருணையே திறக்குமா சந்நிதி
ஏன் கர்த்தரே பிறக்குமா நிம்மதி
Oh! My Lord! Please answer my Prayer
மான்களும் சொந்தம் தேடுதே
இம்
மானிடம் செய்த பாவம் என்னவோ!”

என அச்சத்தால் புலம்பும் நவீன நடிப்பு முறைக்கார்ர்க்களான மேற்கு நாட்டினர் குறிப்பிடும் Gestures எனப்படம் அங்க அசைவுகளை எவ்வாறு இந்த இரண்டு பாடல்களிலும் செய்துள்ளார் என்பதை இனிவரும் இயலில் தனியாகக் காணலாம்.

6. பெருமிதம்

இதனை வீரமென்று பொருள் கூறுகிறார் பேராசிரியர். ‘வீர’மாவது மேலான காரியங்களில் உண்டாகும் மனத்துணிவு என்பது தண்டியலங்காரவுரை. கல்வி, வீரம், இசைமை என்ற பழியொடு வருவன செய்யாது, எத்தனை இன்பம் வந்தாலும் புகழொடு வருவன செய்தல், கொடை, ஆகியவற்றால்’பெருமிதம் தோன்றும்.

‘சொல்லப்பட்ட பெருமிதம்’ என்றதனாற் காம்ம் பற்றியும் பெருமிதம் பிறக