அநீதியையும், மனிதர்களுக்கிடையே உள்ள ஏற்றத் தாழ்வையும், அகற்றத் தன்னை முழு மூச்சோடு அர்ப்பணித்துக் கொண்டவர் குடியரசுத் தலைவர் கென்னடி! தன்னுடைய பெரிய நாட்டில், மனித உரிமைகளுக்காகவும், நிறவெறியை ஒழிப்பதற்காகவும் அவர் பாடுபட்டார். அதைப் போலவே தன்னுடைய நாட்டுக்கு வெளியே பரந்து கிடக்கும், உலகின் பெரும் பகுதி மக்கள் வாழ்வின்றி, வளமின்றி, ஏழ்மையில் அவதிப் படுவதைப் போக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். தன்னுடைய நாட்டுக்கும் – பதவிக்கும் பெருமையும் புகழும் தேடித் தந்த கென்னடியிடம், உலகின் பல பகுதி மக்களும், அன்மையும் நம்பிக்கையையும் வைத்திருந்தனர்.