பொன்மொழிகள்

>> next page

  • நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.
  • கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்!
  • அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
  • சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
  • வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
  • வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாக்க் கிடைக்கும் என்பது நிச்சயம்.
  • எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.
  • எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை.
  • எழுத்தாளர் என்றால் எழுத்தை ஆள்பவர்கள் என்று கருதுவதால் அந்த எழுத்துக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள்.
  • உழைப்பே உயர்வு தரும்; உழைப்போம் உயர்வோம்; உழைப்போரே உயர்ந்தோர்; உழைப்பவராலே உலகம் உயர்ந்திடும்.
  • நமது சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்; சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
  • அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.
  • சமத்துவச் சமுதாயம் காண்பதே உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான இலட்சியம் எனும் மூலக் கருத்திற்கு முதலிடம் தாருங்கள்.
  • உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் த்துதவத்தை நிலைநாட்டுவீர்.
  • ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை. மகிழ்ச்சி தேவை. இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடையில்லாமல் இருப்பதுதான்.
  • தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் நலன்களைக் காப்பாற்றி அவர்களை மேம்படுத்தப் பாடுபடுவோம்.
  • சமுதாயத்தில் மக்கள் வாழ்வதற்காக ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்.
  • சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பதுஅவசியம்.
  • தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமழ்ச் சமுதாயம் தமிழ் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.
  • ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.
  • மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை.
  • கூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல – தரத்தை மட்டுமல்ல. அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின் அடிப்படை மூலதனமாகும்.
  • கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தையும் காட்ட முடியும்.
  • மனிதர்களுக்குச் சில குணங்கள் உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் சரியான முறையில் தங்களது சந்ததியினரை வழி நடத்திச சென்றால் அழகான குடும்பத்தினரை உருவாக்க முடியும்.
  • கடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.
  • ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அமைதியில்தான் ஆரம்பமாகிறது. பிறகு இறுதியில் உச்சக்கட்டம் ஏற்பட்டு முடிகிறது.
  • பாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும். பிறர் ரசிப்பதற்காக அல்ல! ஆடலும் பாடலும் அதுபோலத்தான். ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.
  • குழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
  • கலை எப்போதும் இருக்கும். ஆனால் கலைஞர்கள் இருக்கமாட்டார்கள்.
  • இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால்தான் எதிர் காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்.
  • சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்துகொள்ளாத்தே இதற்குக் காரணம்.
  • பதவிகள் எல்லாம் வந்தால் வரும்; போனால் போகும். நான் நடிகனாக இருந்தவன்; அந்த உணர்வை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது.
  • கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படுவது சிக்கலை ஏற்படுத்துவதற்காக அல்ல; அவசியமான நன்மைகளைப் பெறுவதற்கும் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெருவதற்குமேயாகும்.
  • ஒரே கட்சி ஆட்சிதான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி, அது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக்க் கூற விரும்புகிறேன்.
  • சுயநலமில்லாத நம்பிக்கை வெற்றி பெறும்.
  • எல்லோரும் ஒத்துழைத்தால் மக்களைத் தயார்ப்படுத்த முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
  • மக்களுக்கு எதுதேவையோ அதைச் செய்வதற்குத்தான் அரசு. அந்த அரசைத் தேர்ந்தெடுப்பது மக்கள்.
  • சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது.
  • உயர்ந்த கல்வி கற்கும்போதே உழைக்கும் கல்வியையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இசைத்தட்டுகளின் மூலம் ஒலித்தால் மட்டும் போதாது. மாணவர்களுக்கும் அந்தப் பாடல் பாடம் ஆக வேண்டும்.
  • நம்முடைய குழந்தை மூக்கு வடித்துக் கொண்டு நின்றால் நாம் அதைத் துடைக்கிறோம்; ஆனால் அடுத்தவர்களின் குழந்தை அவ்வாறு இருந்தால் நாம் துடைப்பதில்லை.
  • கலைஞர்கள் நாட்டுக்காகப் பாடுபடவேண்டும்; அப்போதுதான் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பார்கள்.
  • மத்த்தின் பெயரால் பிரச்சினைகள் இல்லை. அவர்கள் செய்கின்ற செயல்களினால்தான் பிரச்சினைகள் வருகின்றன.
  • உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் இறுதிவரை அதற்காகப் பாடுபட வேண்டும்.
  • நமக்குள் பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம்; ஆனால் அந்த நேரத்தில் இந்தியாவைப் பிரிக்க எந்த சக்தி வந்தாலும் அதை எதிர்த்தே ஆகவேண்டும்.
  • கடமையைச் செய்கின்ற ஒவ்வொருவரும் ஒன்றே குலம் என்ற கொள்கைக்குச் சொந்தக்கார்ர்கள்தான்.
  • இளைஞர்கள் அரசியலைத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிகளாக இருக்கக்கூடாது.
  • நீதித் துறையில் அரசியல் கட்சி வரக்கூடாது; வந்துவிட்டால் நீதி செத்துவிடும்.
  • நாட்டின் தற்காப்புக்காக உயிரையும் பணயம் வைத்துப் போராட வேண்டியது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.
  • நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி நம்க்குப் புரியாமல் போய்விடும்.
  • சக்தி குறைந்தவர்களிடம் வீரத்தைக் காட்டுவது சரியல்ல.
  • அரசியல் கட்சிகளில் சேருபவர்கள் எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்பதல்ல; அவர்கள் செய்யும் தொழிலில் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்.
  • நல்லவன் என்று பேர் எடுப்பது மிகவும் சிரம்மான காரியம்.
  • புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது. அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்.
  • நல்ல நிலைக்கு வந்த பிறகும் நாம் அனுபவித்த துன்ப, துயரங்களை நினைவில் கொண்டால்தான் நமது கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியும்.
  • சொந்தக் காலில் நிற்பது மட்டுமல்ல, நடைமுறைக்குத் தேவையானதும் ஆகும்.
  • தமிழுக்காக, தமிழ் இன்த்திற்காகப் பாடுபட்டு கொள்கைக்காக இருக்கின்ற தியாகம் செய்த நல்லவர்களை நான் என்றும் மறக்க மாட்டேன். விட்டுவிடவும் மாட்டேன்.
  • மத, இன, சாதி, மொழி, முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும்.
  • மக்கள் தொகைப் பெருக்கம் மதுவைப் போலக் கேடு பயக்கும்
  • ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை; வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பதுதான் தியாகம்.
  • இந்த மக்களிடமிருந்து என்னைப் பிரித்திடவோ, என்னிடமிருந்து இந்த மக்களைப் பிரித்திடவோ எந்த சக்தியாலும் முடியாது.
  • உழைக்கும் வர்க்கத்திற்கே இந்த உலகம் உரிமையானது என்பதை உணர்த்தும் நாள தான் இந்த மே நாள் ஆகும்.
  • நம்மை நாமே ஆண்டு கொள்கிற மக்களாட்சியின் வேலைநிறுத்தங்களால் ஏற்படும் இழப்புகள் இறுதியில் உழைக்கும் வர்க்கத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
  • சமத்துவ சமுதாம் காண்பதே உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான இலட்சியம் ஆகும்.
  • உழைப்போம்! உயர்வோம்! உழைப்பால் உலகை உயர்த்துவோம்! உழைக்கும் மக்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
  • படித்தவன் புத்திசாலியாகிறான் என்ற சொன்னால் மட்டும் போதாது. தன்னை வாழவைத்துக் கொள்கிற தகுதியுள்ளவனாக வெளியே வருகிறான்; தொழில் பயின்றவனாக வருகிறான் என்கிற உரிமை – தகுதி இருக்க வேண்டும்.
  • மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்து நமக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆகவே மக்களுக்குத் தொண்டு செய்கிறோமே தவிர மக்கள் எஜமானர்கள் அல்ல என்ற வகையில் அரசு அலுவலர்களும், மற்றவர்களும் அந்தப் பணியைச் செய்தால்தான் நீலைமை சீர்படும்; எந்தத் திட்டமும் நிறைவேறும்.
  • நேற்று சொன்னதை இன்று மறப்பது அண்ணாவின் அகராதியில் இல்லை. முடியாத்தை முடியவில்லை என்று துணிச்சலாகச் சொல்லுவோம். தவறான வழிகளில் செல்லமாட்டோம். எந்தச் சமயத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யப் பின்வாங்கமாட்டோம்.
  • மாணவர்களாக இருந்தால் படிப்பு முடிந்து வெளிவரும் வரை அரசியலில் நேரடித் தொடர்பு கொள்ளாமல் இருப்பது; சாதி மதப் பிரிவுளைக் களையும் மனப் பக்குவம் பெறுவது நீந்தக் கற்றுக் கொள்வது போன்றவற்றைக் கடமையாக்க் கொள்ள வேண்டும்.
  • உடலைப் பேணிக் காப்பது, தேகப்பயிற்சி செய்வது உண்மைக்கு மட்டுமே மதிப்பளிப்பது, உள்ளத்தூய்மைப் பெறுவது, எவ்வளவு அதிகமாக விஞ்ஞானத்தையும், உலக வரலாற்றையும் கற்க முடியுமோ அத்தனையையும் கற்பது; தற்காப்புக் கேற்ற ஒரு கலையைக் கற்பது இவைகள் எல்லாமே மாணவர்களின் கடமையாகும்.
  • எதையும் உண்மையின் அடிப்படையில் விமர்சியுங்கள். முடிவில் உண்மைதான் நிலைக்கும் என்பதை மனதிற்கொண்டு விமர்சியுங்கள்.
  • அறிமுகம் என்பது பரஸ்பரம் செய்யபட வேண்டிய காரியம் ஆகும்.
  • அண்ணா தி.மு.க.வின் கொள்கையின் பெயர் அண்ணாயிஸம்.
  • திராவிடர் இயக்கம் என்பது ஓர் இலட்சியம், குறிக்கோள், எந்த வகையான தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் மலைவாழ் மக்களும் எல்லோரும் சமம் என்பதுதான் திராவிடர் இயக்கம்.
  • மக்களை மகிழ்விக்கவே நடிக்கிறோம். அவர்களால்தான் கலைஞர்களின் வாழ்க்கைச சக்கரமே சுழல்கிறது. அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால் அவர்கள் ஒதுக்கிவிடுவார்கள்.
  • ஜனநாயகத்தின் அடிப்படையே சிந்திப்பதும், பேசுவதும், எழுதுவதும் ஆகும். ஆனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பதுவதற்குச் சிந்திக்கவும், பேசவும், எழுதவும் உள்ள உரிமையைப் பயன்படுத்த அதே ஜனநாயகம் அனுமதிக்காது.
  • சராசரி மனிதனின் எண்ணங்களையும், அவன் தேவைகளின் வற்புறுத்தலையும், அவன் உள்ளத்தின் உரிமை ஒலியையும் எதிரொலிக்காத எவனும் ஒரு அரசியல் கட்சிக்குச் சொந்தம் கொண்டாடத் தகுதியோ உரிமையோ கிடையாது.
  • வதந்தி எந்த நேரத்திலும் பரப்பக்கூடாத ஒரு ஆபத்தான , பயங்கர விஷவாயு ஆகும்.
  • என்னை எதிரியாக நினைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் கூட என்னை நேரில் சந்திக்கும்போது அன்போடு பேசுவதற்கு காரணமே, அவர்களது ஒலிகளையும், எதிரொலிகளையும் நான் என்றும் தடுக்க முயலாதவன் என்பதோடு, அத்தகைய எண்ணத்திற்கும், எனக்கும் வெகுதூரம என்பதனாலும்தான்.
  • அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத்தான் சொந்தம்; கலைஞர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.
  • செய்யும் தொழிலே தெய்வம் என்கிற உணர்வோடு முயற்சி திருவினையாக்கும் என்கிற நம்பிக்கயோடு பாடுபட்டால் வெற்றி நிச்சயம்.

>> next page