• பற்களுக்கிடையில் மனிதன் மறைந்துள்ளான்.
  • தண்டிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கும்போது மன்னிப்பதும் ஆகிய இரு வழிகளில் விவேகம் தோன்றுகிறது.
  • பேனாவின் வழுக்கலைவிட காலின் வழுக்கல் குறைந்த அபாயமாகவே இருக்கிறது.
  • நரை மயிர் மரணத்தின் கடிதம்.
  • நீ சாகும்போது உன் தங்கையின் கண்ணீர் போகப்போக உலர்ந்து போகும். உன்னை இழந்தவளின் கண்ணீர் மற்றொருவனுடைய தோள்களில் ஓய்ந்து போகும். ஆனால் உன்னுடைய தாய் அவள் மரணம் அடைகின்ற நாள்வரை உனக்காகத் துக்கப்படுவாள்.
  • மணிமுடி மிக கணமாக இருக்கிறது. ஒரு கிரீடத்தின் கீழே இரவிலே முத்துக்களைவிட அடிக்கடி அதிகமாகக் கண்ணீர் வழிகிறது.
  • மற்றவர்கள் அனுபவத்திலிருந்து ற்கின்றனர். இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மூன்றாவது வகுப்பினர் அவ்களது சொந்த அனுபவங்களிலிருந்தோ அன்றி பிறர் அனுபவங்களிலிருந்தோ கற்பதில்லை. இவர்கள் மூடர்கள்.
  • எவன் அஞ்சுகிறானோ அவன் மட்டுமே உண்மையான வீரன்.
  • அதிர்ஷ்டக்காரனை நைல் ந்தயில் தலை கீழாகத் தள்ளினாலும் அவனுடைய வாயில் ஒரு மீனோடு வெளிவருவான்.
  • அதிர்ஷ்டசாலியான மனிதனுடைய வழியைப் பின்தொடர்க. நீ அதிர்ஷ்ட சாலி ஆவாய்.
  • அழுத்தத்தினாலன்றி எண்ணெய் வெளிவராது.
  • ஒரு மூடன் தன்னுடைய வாயில் தன் அறிவைப் பெற்றிருக்கிறான். ஓர் அறிஞன் தன் வாயை அறிவால் நிரப்பி வைத்திருக்கிறான்.
  • அறிவைத் தேடும் ஒருவருக்கு தேவதைகள் தங்களுடைய சிறகுகளை வளைத்துக் கொடுக்கின்றன.
  • ஆரோக்கியம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.
  • எனக்குச் செருப்புகள் இல்லை. நான் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். பாதங்களே இல்லாத ஒரு மனிதனைச் சந்நிக்கும் வரை.
  • உங்கள் கூடாரங்களைத் தனித்தே வைத்திருங்கள். இதயங்களை ஒன்றாக கொண்டு வாருங்கள்.
  • அன்போடு அன்பைத் திரும்ப வழங்கு.
  • அன்புடைமையைத் தவிர அன்புடைமைக்கு வேறு ஏதாவது கைமாறு உண்டோ?
  • இளமையின் நினைவு ஒரு பெருமூச்சு.
  • ஒரு பொய் அறிவுள்ளதாக இருக்கலாம். ஆனால், உண்மை அதுவே ஞானமாக இருக்கிறது.
  • பிறப்பு மரணத்தின் தூதுவன்
  • ஒன்றும் தெரியாத நிலையில் தனக்கு ஒன்றும் தெரியாது என்று புரிந்துகொண்டிருப்பவன் ‘சாதாரணமானவன்’. வழிகாட்டப்பட வேண்டிவன்.
  • எல்லாம் தெரிந்த நிலையில் தனக்கு எல்லாம் தெரியும் என்ற புரிந்து கொண்டிருப்பவன் ‘புத்திமான்’ பின்பற்றப்பட வேண்டியவன்.
  • தன் மனைவியை மதிக்காதவன் தன்னையே அவமதித்துக் கொள்கிறான்.
  • போர்வாளே சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் திறவுகோள்.
  • தகுதிக்கு மீறிச்செலவு செய்கிறவன் தன் உயிரை முடித்துக் கொள்ள கயிறு திரிக்கிறான்.
  • அவன் முன்பு பனையாக இருந்தான். ஆனால், இப்போது சம்மட்டியாக இருக்கிறான்.