பெர்லின்: படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பெண் போடலாம்; பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள் திறமை பற்றி மாணவர்கள் மதிப்பெண் போடலாமா? “போடலாம்; தவறில்லை’ என்று, பள்ளி மாணவர்களுக்கு ஜெர்மனி கோர்ட் பச்சைக்கொடி காட்டியுள்ளது.ஜெர்மனியில் இன்டர்நெட்டில், பல “ரேட்டிங்’ வெப்சைட்கள் உள்ளன. இதில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தரும் திறமை பற்றி மாணவர்களை, “மதிப்பெண் போட வைக்கும்’ வெப்சைட் ஒன்று பிரபலமாக உள்ளது.
இதன் முகவரி www.spickmich.de இதில், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம் தொடர்பாக, மாணவர்கள் மதிப்பெண் போட்டுள்ளனர். தரமான ஆசிரியர் என்றால், அதிக மதிப்பெண்ணுடன் கிரேட்-1 என்பதில் “டிக்’ செய்ய வேண்டும். மோசமாக பாடம் நடத்தும் ஆசிரியர் என்றால் ஐந்தாம் கிரேட் போட வேண்டும். இதனால், பாதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர், கோர்ட்டுக்கு போய் விட்டார். “என்னை பற்றி ரேட்டிங் நடத்த வெப்சைட்டுக்கு உரிமை இல்லை’ என்று வாதாடினார்.
ஆனால், கோர்ட் இதை நிராகரித்து விட்டது.”ஆசிரியர் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த ரேட்டிங்கும் போடப்படவில்லை. ஆசிரியர் பாடம் நடத்தும் விதம் பற்றி தான் தரம் பிரித்து ரேட்டிங் தரப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் பங்கேற்பதில் தவறு இல்லை. இது, ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் திறனும் அதிகரிக்கும்’ என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.ஜெர்மனியில், ஆசிரியர்கள் தரத்துக்கு மட்டுமின்றி, ஓட்டல்கள், தியேட்டர்கள், பொது நூலகங்கள், ரயில் நிலையங்கள் என்று ஏகப்பட்ட விஷயங்களுக்கு, “ரேட்டிங்’ தரும் வெப்சைட்கள் உள்ளன.
Leave a Reply