பனிலிங்க தரிசனம் துவங்கியது

posted in: மற்றவை | 0

ice-lingam-in-amarnath-caveகாஷ்மீர் மாநிலத்தில், கடல் மட்டத்தில் இருந்து 3,952 மீட்டர் உயரத்தில், இயற்கையாக ஒவ்வொரு ஆண்டும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்களில் முதல் குழுவினர் நேற்று தரிசனம் செய்தனர்.

அமர்நாத் குகைக் கோயில் தரிசனத்துக்காக பால்டால் அடிவாரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கடந்த மூன்று நாட்களாக காத்திருக்கிறார்கள்.

அமர்நாத் கோயில் மலைப்பாதையை கண்காணித்துவரும் பாதுகாப்பு படையினரின் அனுமதி கிடைத்ததும் முதல் குழுவினர் புறப்பட்டு சென்று இயற்கையாக பனியால் உருவான லிங்கத்தை தரிசித்தனர். மழை பெய்து கொண்டிருந்தாலும், நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் காத்திருந்து பனிலிங்க தரிசனம் மேற்கொண்டனர்.

பனிப்பொழி அதிகமாக இருப்பதால் இந்தப் பக்தர்கள் இன்று காலையில்தான் அடிவாரத்துக்கு திரும்புகின்றனர். பக்தர்களுக்கான வசதிகள் யாவும், பால்டால் மலையடி வாரத்திலும் அமர்நாத் குகைக் கோயில் பகுதியிலும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. மலைப்பாதையில் ஷேஷ்நாக், புஷ்பதேரி, மகாகன்ஸ் பகுதிகளில் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. மலைப்பாதையில் விழும் பனியை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது தொடர்ந்து. இப்பாதை வழியே பக்தர்களை அனுப்பும் முடிவு வரும் 21 ஆம் தேதிக்குப் பிறகே எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அமர்நாத் குகை பனிலிங்க தரிசனம் ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5ஆம் தேதி ரக்ஷாபந்தன் தினத்தன்று முடிவடையும். ஆனால், அமர்நாத் கோயிலுக்கு செல்லும் பாதையில் பனி மூடிக்கிடந்ததால் இம்முறை தாமதமாகிவிட்டது. ஆறடிக்கு மேல் குவிந்துகிடந்த பனி அகற்றப்பட்ட பின்னர் நேற்று முதல் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் அனுமதி்க்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *