மதுரை: “”கர்நாடகத்திற்கு காரிப் பருவத்திற்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்” என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: கர்நாடகாவில் தற்போது உரத்தட்டுப்பாடு இல்லை. காரிப் பருவத்திற்கு (ஏப்ரல்- செப்டம்பர்) எட்டு லட்சம் மெட்ரிக் டன் உரம் தேவைப்படுகிறது. இதில் 4 லட்சம் மெட்ரிக் டன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 2.80 லட்சம் மெட்ரிக் டன் இந்த மாதத்திலும், மீதமுள்ள 1.20 லட்சம் மெட்ரிக் டன் பைப் லைன் மூலம் வழங்கப்படும்.
கர்நாடகா அரசுக்கு தேவையான டைமோனியா பாஸ்பேட் உரம் 4.10 லட்சம் மெட்ரிக் டன் வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 3.13 லட்சம் மெட்ரிக் டன் வழங்கப்படும். கூடுதலாக ஒரு லட்சம் மெட்ரிக் டன் வழங்கவும் உரத்துறை அமைச்சகம் தயாராக உள்ளது. 20 ஆயிரம் மெட்ரிக் டன் கலப்பு உரம் மற்றும் எம்.ஓ.பி., உரங்கள் வழங்கப்படும். மாநில அரசு உரங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதையும், பதுக்கல், கடத்தல் நடைபெறாமலும் கண்காணிக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply