உயரத்தைக் கண்டால் நடுநடுங்குபவர்கள் சிக்காகோ நகரில் உள்ள சியர்ஸ் டவர் பக்கம் வராமல் இருந்தால் நல்லது. அப்படி வந்துவிட்டால், அதை அண்ணார்ந்துப் பார்க்கும்போதே உயிரும் மேலே போனாலும் போய்விடும்.
சிக்காகோ நகரில் கட்டப்பட்டுள்ள சியர்ஸ் கட்டடம் 103 மாடிகளைக் கொண்டதொரு பிரமாண்ட உயரமுள்ள கட்டடம். இதன் 1,450 அடி உயரத்தில், உச்சியில் கட்டடத்தின் வெளிப்பக்கமாக 4அடி சுற்றளவில் கண்ணாடி பால்கனிகள் பொருத்தப்பட்டன.
சுற்றுலாப் பயணிகளுக்கு இது த்ரில்லிங்கான சமாச்சாரம்தான். இத்தனை உயரத்தில் இருந்தபடி காலுக்கு அடியில் பார்த்தால் அடிவயிறு கலங்கிப் போகும். மார்பு துடிப்பதும் நின்றுபோகும்.
கட்டடத்தைக் குறிப்பிட்டுக் காட்டும் வண்ண விளம்பர வாசகங்களும் அந்த உயரத்தில் ஒட்டப்பட்டன. வருடம் முழுவதும் இங்கு வந்து குவியும் சுமார் 13 லட்சம் பார்வையாளர்களைக் கவரும் வகையில் இவை செய்யப்பட்டன.
இதுகுறித்து கண்ணாடி பால்கனி நிறுவியவர்கள் சார்பில் கூறப்பட்ட செய்தியில், ”இது 1.5 இன்ச் கனத்திலான கண்ணாடி தான். ஆனால் 5 ஆயிரம் டன் வரை எடையைத் தாங்கும். பள்ளிச் சிறுவர்கள் குறிப்பிட்ட உயரத்தில் குதித்தால் ஏற்படும் தரை அதிர்வுகூட இதில் ஏற்படாது” என்று எளிதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி பால்கனில் நின்றபடி பார்க்கும்போது சிக்காகோ நகரும், நகருக்கும் ஓடும் சிக்காகோ ஆறும், சிறுத்துபோன மனிதர்களும் வாகனங்களும் நிச்சயம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்களாக அமையும் என்கிறார்கள்.
Leave a Reply