சென்னை : “”துணைவேந்தர்கள் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ, பதவி நீக்கம் செய்யவோ பல்கலைக் கழக சட்டத்தில் இடமில்லை,” என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “”மாநில தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அமைக்கப்படும் போது, அதில் சி.ஐ.ஐ., பிரதிநிதிகளும் இடம்பெறுவர். தரத்தை மேம்படுத்துவது பல்கலைக் கழகத்தால் மட்டுமே முடியும். பல்கலைக் கழகங்கள் சமுதாயம் சார்ந்த படிப்புகளை வழங்க வேண்டும். புதிய பல்கலைக் கழகங்களை உருவாக்குவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது, இதை தவிர்க்க வேண்டும்,” என்றார்.
கோவை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் பொன்முடியிடம் கேட்டபோது, “”இதுவரை எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. இதுகுறித்த வழக்கு கோர்ட் விசாரணையில் உள்ளது. புகார் வந்தாலும் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது. துணைவேந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ, பதவி நீக்கம் செய்யவோ, பல்கலைக் கழக சட்டத்தில் இடமில்லை. இன்னும் ஆறு மாதங்களில் அவரது பதவிக்காலம் முடிகிறது; அப்போது அவராகவே போய்விடுவார்,” என்றார்.
Leave a Reply