பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவியை காதலித்த பேராசிரியர் வேலை நீக்கம்

posted in: மற்றவை | 0

பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழகத்திலுள்ள பேராசிரியர் மதுகார்த் சவுத்திரி மாணவியை காதலித்ததால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பவர் மதுகார்த் சவுத்திரி. இவர் இந்தி துறையில் பணியாற்றி வந்தார். திருமணம் ஆனவர்.

இவர் தனது வகுப்பில் படித்து வந்த ஜூலி என்ற மாணவியை காதலித்தார்.

அவர்கள் இருவரும் தனிமையில் ஒன்றாக இருந்ததை அவர் மனைவி பார்த்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மதுகார்த்சவுத்திரியை தாக் கினார். அப்போது அங்கு கூடிய பொது மக்கள் அவர் முகத்தில் கரியை பூசி அவமானப்படுத்தினார்கள்.

இந்த பிரச்சினை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் அவரிடம் விசாரணை நடத்தியது. அப்போது ஜூலியை நான் காதலிக்கிறேன் என்று கூறி வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். இதனால் அவரை பல்கலைக்கழக நிர்வாகம் “சஸ்பெண்டு” செய்தது.

பின்னர் இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர் விளக்கம் அளித்தார்.

அவர் கொடுத்த விளக்கம் தொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் கூடி ஆய்வு செய்தது. அவர் விளக்கம் ஏற்கதக்கதல்ல என்று கூறி அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய முடிவு எடுத்தனர். அதை ஏற்று துணை வேந்தர் அவரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *