ரூ. 7300 கோடியில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்

07-cpcl-200சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குச் சொந்தமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) ரூ.7300 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக இந்தப் பணிகள் நடைபெறும். மேலும் சென்னைக்கு அருகே 400 ஏக்கர் பரப்பளவில் தனது சுத்திரிகரிப்பு ஆலையையும் விஸ்தரிக்கவிருக்கிறது.

சமீபத்தில் சென்னையில் நடந்த சிபிசிஎல் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்ட துவக்க விழா மற்றும் விமான எரிபொருளுக்கான குழாய் வழி அமைக்கும் திட்ட துவக்க விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் சிபிசிஎல் சேர்மன் ஆச்சார்யா.

யூரோ 4 தரத்தை பூர்த்தி செய்யும் வகையிலான 1.5 மில்லியன் டன் டீஸல் சுத்திகரிப்பு யூனிட், 1.5 லட்சம் டன் நாப்தா சுத்திகரிப்பு யூனிட் போன்ற திட்டங்களும் சிபிசிஎல் கைவசம் உள்ளன. இவற்றுக்கு ரூ.2600 கோடி செயலவிடப் போகிறது சிபிசிஎல்.

மணலி சுத்திகரிப்பு ஆலையின் தரத்தை மேம்படுத்தவும் ரூ.470 கோடியைச் செலவிடப்போகிறார்களாம். இதன்மூலம் 10.5 மில்லியன் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டதாக மணலி சுத்திகரிப்பு நிலையம் மேம்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *