43,000 ச.கி.மீ. இந்திய நிலம் சீனா வசம் உள்ளது: எஸ்.எம்.கிருஷ்ணா தகவல்

posted in: மற்றவை | 0

sm_krishna002இந்தியாவுக்கு சொந்தமான 43 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலம் சீனாவின் வசம் உள்ளது.
மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:

கடந்த 1962ம் ஆண்டு இந்தியாக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட போரை தொடர்ந்து காஷ்மீர் பகுதியில் உள்ள 38,000 ச.கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்தது. காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்த 5,180 ச.கி.மீ. பரப்பளவும் 1963ம் ஆண்டு பாகிஸ்தானும் சீனாவும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இப்போது சீனாவிடம் உள்ளது.

இதன் மூலம், இந்தியாவுக்கு சொந்தமான மொத்தம் 43,180 சதுர கிலோ மீட்டர் நிலம் இப்பொழுது சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது. பாகிஸ்தானும் சீனாவும் செய்து கொண்ட எல்லை ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்று இந்தியா பலமுறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *