மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக உயர்கிறது: ப்ரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல்

posted in: மற்றவை | 0

p_mukherjee034மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த நிதித்துறை பரிந்துரை செய்துள்ளது. அதற்கான அறிக்கையை ப்ரணாப் முகர்ஜி மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.


மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது முன்பு 58 ஆக இருந்தது. அதை பாரதீய ஜனதா கூட்டணி அரசு 1998-ல் 60 ஆக உயர்த்தியது.

இப்போது ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய நிதித்துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செயதுள்ளது. இதற்கான அறிக்கையை மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி மத்திய அரசிடம் வழங்கி உள்ளார்.

இந்த ஆண்டு மத்திய அரசு மற்றும் ராணுவதுறைகளில் 1 லட்சம் ஊழியர்கள் வரை ஓய்வு பெற உள்ளனர். அத்தனை பேரும் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றால் அதற்குரிய ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் சலுகைகள் என பல ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும். பின்னர் புதிய ஊழியர் தேர்வு மூலம் அதற்கும் சம்பளம் வழங்க வேண்டும். இதனால் மத்திய நிதித்துறைக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுகிறது.

இதை தவிர்க்கவே ஓய்வு பெறும் வயதை 2 ஆண்டுகள் அதிகரிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர்.

இதை போல ராணுவ உயர் அதிகாரிகள் பதவி சிவில் துறைகளில் உயர் பதவிகளுக்கு தகுதியான ஆட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளதால் அவர்கள் ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பாக ஏற்கனவே பரிந்துரைகள் வந்துள்ளன. எனவே ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க மத்திய அரசு சம்மதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் விவகாரங்களை கவனிக்கும் பெர்சனல் மற்றும் பயிற்சி துறை சம்மதித்தால் மட்டுமே இது நடைமுறைக்கு சாத்தியமாகும். 62 வயதாக உயர்த்தும்போது பதவி உயர்வு போன்றவற்றில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.

எனவே இரு துறைகளையும் அழைத்து பேசி பிரதமர் முக்கிய எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக இன்று நடக்கும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதில் சம்மதம் கிடைத்தால் பிரதமர் சுதந்திர தின உரையிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

1998-ல் ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தியபோது 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயன் அடைந்தனர். அவர்கள் 58 வயதிலேயே ஓய்வு பெற்று இருந்தால் மத்திய அரசு மொத்தம் ரூ. 5,200 கோடி கொடுக்க வேண்டியது இருந்து இருக்கும். அனால் ஓய்வை நீடித்ததால் ரூ. 1,493 கோடி மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டது.

இதே போன்ற பயனை அடைய இப்போது மத்திய அரசு ஓய்வு வயதை அதிகரிக்க திட்டமிட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *