11,000 பேரை வேலைக்கு சேர்க்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு

8832776ஐதராபாத் : நடப்பு நிதியாண்டில் 11,000 பேரை வேலைக்கு சேர்க்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.பாரத ஸ்டேட் வங்கி சேர்மன் ஓ.பி.பட் அளித்த பேட்டியில் : பாரத ஸ்டேட் வங்கி வங்கி சமீப காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார். மேலும் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் கிளைகளை துவங்க திட்டமுள்ளது என்றார்.

அதிகப் படியான கிளைகள் திறக்கயிருப்பத‌ால், வங்கி சேவைகளை திறம்பட செய்ய11,000 பேரை வேலைக்கு சேர்க்கயிருப்பதாக பட் விளக்கமளித்தார். வங்கி கடன் பொறுத்த வரை, பாரத ஸ்டேட் வங்கி ஹோம் லோன் ( வீட்டுக் கடன் ) அளிப்பதில், ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் எச்.டி.எப்.சி., வங்கிகளை விட சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். வீட்டு கடன் அளிப்பதில், பாரத ஸ்டேட் வங்கி வட்டி விகிதம் குறைத்துள்ளது. ஆனால் இந்த ஒரு சலுகை‌க்கு மட்டுமே ஆதாரமாக கொண்டு ஏராளாமான வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளனர். இந்தூர் ஸ்டேட் வங்கியை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பது குறித்து ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *