கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் அமெரிக்காவின் அப்பல்லோ 15 விண்கலம் இறங்கிய இடத்தைச் சுற்றி பெரிய வளையம் காணப்படுவதை சந்திரயான்-1 விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது.
சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்த டெரைன் மேப்பிங் கேமரா இந்த படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. இந்தப் பெரிய வளையத்திற்குக் காரணம், நிலவின் தரைத்தளத்தில் மனிதர்கள் நடமாடியதே காரணம் என்று விஞ்ஞாநிகள் கருதுகிறார்கள்.
ஏற்கனவே ஜப்பான் விண்வெளி நிறுவனம் தனது செலீன் விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட டெரைன் மேப்பிங் கேமராவும், இந்த வளையத்தைப் படம் பிடித்துள்ளது.
ஆனால் சந்திரயான்-1 அனுப்பியுள்ள புகைப்படம் மிகத் தெளிவாக உள்ளது. மனிதர்கள் நடமாட்டம் காரணமாகவே அந்த வளையம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து இஸ்ரோ வி்ஞ்ஞானிகள் கரன்ட் சயின்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், நமது கண்டுபிடிப்பு மிகத் தெளிவாக உள்ளது. புகைப்படம் துல்லியமாக இருப்பதோடு, மனித நடமாட்டமே இந்த வளையம் ஏற்படக் காரணம் என்பதை நிரூபிக்கும் வகையிலும் உள்ளது.
மேலும், அப்பல்லோ விண்கலத் திட்டத்திற்குப் பின்னர், அது போய் இறங்கிய இடத்தில் வளையம் ஏற்பட்டிருப்பதையும், மனித நடமாட்டமே இதற்குக் காரணம் என்பதையும் துல்லியமாக படம் பிடித்த முதல் விண்கலம் சந்திரயான்-1 தான் என்கின்றனர்.
சந்திரயான்-1 விண்கலம் செயலிழப்பதற்கு முன்பு இந்த புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply