சென்னையில் உற்பத்தியாகும் போர்டு நிறுவன பிகோ கார்கள்

35843631சென்னை: இந்தியாவின் சிறிய ரக கார் சந்தையில், அமெரிக்காவின் போர்டு கார் நிறுவனமும் நுழைந்து விட்டது. இந்நிறுவனம், சமீபத்தில் தனது, பிகோ காரை அறிமுகப்படுத்தியது. சென்னை மறைமலையடிகள் நகரில் போர்டு நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு தான், புதிய பிகோ கார் உற்பத்தி செய்யப்படுகிறது.


அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த கார் விற்பனைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சிறிய ரக கார் சந்தையை, மாருதி சுசூகி, ஹுண்டாயம் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் ஆக்கிரமித்து வருகின்றன. இவற்றுக்கு போட்டியாக தற்போது போர்டு நிறுவனமும், பிகோ காரை அறிமுகப்படுத்தி களத்தில் குதித்துள்ளது. எனினும், அடுத்த ஆண்டு துவக்கத்தில், வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் போலோ மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பீட் போன்ற சிறிய ரக கார்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த போட்டியையும் போர்டு நிறுவனம் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிரடி விலையில், பிகோ கார் அறிமுகப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *