புதுடில்லி: வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்தவர்கள், நம்நாட்டில் மருத்துவத் தொழிலை செய்ய வேண்டுமானால், இந்திய மருத்துவக் கவுன்சிலின் தகுதி தேர்வை எழுத வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய சோவியத் யூனியனில் மருத்துவ படிப்பு படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவ தொழிலை மேற்கொள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில், வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவ தொழிலை மேற்கொள்ள மருத்துவக் கவுன்சிலின் தேர்வை எதிர்கொண்டே ஆகவேண்டும்.
இதே போல நம்நாட்டில் எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கவுன்சில் வைக்கும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஹார்வர்டு போன்ற பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள், இந்தியாவில் நேரடியாக மருத்துவ தொழிலை பார்த்து வந்தனர். தற்போது எங்கு படித்தாலும் மருத்துவக் கவுன்சிலின் தகுதி தேர்வை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் மருத்துவ படிப்பு படித்த இந்தியர்கள், இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
Leave a Reply