அதிக முதலீடு: இந்தியாவுக்கு எகிப்து அழைப்பு

5156018கெய்ரோ : தங்கள் நாட்டில் தொழில்துறையில் முதலீடு செய்வதை அதிகரிக்கும் படி எகிப்து நாடு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எகிப்துக்கான இந்திய தூதர் ராமசந்திரன் சுவாமிநாதன் தலைமையிலான குழு ஒன்று எகிப்து சென்றுள்ளது.

அந்நாட்டுடனான தொழில்துறை ரீதியான நட்புறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக இந்த குழு அங்கு சென்றுள்ளது. அப்போது இந்திய பிரதிநிதிகளிடம் பேசிய எகிப்து நாட்டு முதலீட்டு துறை அமைச்சர் மகமது மொகைதீன், தங்கள் நாட்டில் முதலீடு செய்வதை, குறிப்பாக உட்கட்டுமான துறையில் முதலீடு செய்வதை இந்தியா அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *