இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

tsunami-dust-waveஇந்தோனேசியாவை ஒட்டிய பசிபிக் கடலின் அடிப்பகுதியில் புதன்கிழமை மாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையொட்டி இந்தியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, பசிபிக் கடலின் தென்பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை ஒட்டிய பசிபிக் கடல் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் படாங் நகரில் ஏராளமான கட்டடங்கள் இடிந்தன. பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.

ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு ஒரே நேரத்தில் மலேசியாவிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் கோலாலம்பூரில் உயரமான கட்டடங்களில் இருந்து பொதுமக்கள் அவசரஅவசரமாக வெளியேறினர்.

இதையடுத்து இந்தோனேசியா, மலேசியா, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்தது. குறிப்பாக, இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி நிகழும் வாய்ப்பு உள்ளதாக அந்த மையத்தின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இப் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டதற்கான அறிகுறி உடனடியாக ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *