இந்திராகாந்தி விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களுக்கு பிரத்யேக பயிற்சி

440900புதுடில்லி : டில்லி இந்திரகாந்தி சர்வ‌ேதச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களுக்கு ஜெர்மன் நாட்டு கம்பெனி உதவியுடன் பிரத்யேக பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் புதிதாக டெர்மினல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஜனவரி மாதத்துக்குள் இதற்கான பணிகள் முடிவடைந்து, சேவைகள் துவங்கும் என தெரிகிறது. இந்நிலையில் புதிய வளாகத்தில் பல நவீன சேவைகள் அளிக்கப்படயிருப்பதால் அதற்கேற்ப பாதுகாப்பு பணிகளையும் மாறுதல் செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என ஜெர்மனி கம்பெனி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *