கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2010 ஜூன் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கும்

posted in: மற்றவை | 0

power001கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அடுத்த ஆண்டு ஜூனில் மின் உற்பத்தி தொடங்கும் என நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் அணு ஆற்றல் கண்காட்சி நேற்று துவங்கியது. துவக்க விழாவில், கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி பங்கேற்றார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அணு மின் நிலையங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதில்லை. பாதுகாப்பு மிக்கது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்க 2 யூனிட் அமைக்கப் படுகிறது. முதல் யூனிட் கட்டுமானப் பணிகள் 97 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

2010 ஜூன் முதல் மின் உற்பத்தி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் யூனிட் மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்கு தேவையான யுரேனியம் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 8 மாதங்களில் 2 வது யூனிட் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு மின் உற்பத்தி முழு அளவில் தொடங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *