திருநெல்வேலி : “”தமிழக வக்பு வாரியம் நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரியும், திருச்சியில் மருத்துவக்கல்லூரியும் துவங்க திட்டமிடப் பட்டுள்ளதாக” அதன் தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.
நெல்லையில் நேற்று அவர் கூறியதாவது:
தமிழக வக்பு வாரிய நிலங்களை பாதுகாக்கவும், ஆக்ரமிக் கப்பட்ட நிலங்களை தனியாரிடமிருந்து மீட்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதன்படி ஆக்ரமிப்பிலிருந்து இதுவரை 28 ஏக்கர் நிலங்கள் மீட்கப் பட்டுள்ளன. வக்பு வாரியம் சார்பில் திருச்சி அல்லது தஞ்சையில் மருத்துவக்கல்லூரி, நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரி துவங்க திட்டமிடப்பட்டு அதற்கான இடத்தேர்வு நடந்துவருகிறது. நெல்லை, பாளையங் கோட்டை, தாழையூத்து, பாபநாசம் ஆகிய ஊர்களில் ஏதாவது ஒரு இடத்தில் பாலிடெக்னிக் அல்லது வணிக வளாகம் கட்டப்பட்டு வக்பு வாரிய நிரந்தர வருமானத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான் கூறும்போது:
நலவாரியம் மூலம் தமிழகத்தில் ஏராளமான உலமாக்கள் பயன்பெற்றுவருகின்றனர். மாவட்டந்தோறும் 1,000 உலமாக்களை வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிடப்பட்டு இதுவரை 8,875 பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம். அவர்களில் 4,808 பேருக்கு நலவாரிய அடையாள அட்டை தரப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் வாரியத்தில் சேரும் உலமாக்களுக்கும் கிடைக்கும் என்றார்.
Leave a Reply