புலிகளுக்கு உயிர் கொடுக்க சில சக்திகள் முயற்சி – திவயின

posted in: உலகம் | 0

lttelogoயுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உயிர் கொடுக்க சில சக்தகிள் முயற்சி மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகள் இயக்கம் மீண்டும் இயங்குவதாக வெளிக்காட்டும் வகையில் உள்நாட்டில் இயங்கி வரும் சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த 9ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையகத்திலிருந்து வெளியானதாக புலிகளின் இணைய தளங்களில் வெளியான செய்தி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இணைய தளங்களுக்கு குறித்த செய்தி கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் உள்ள சில ஊடகவியலாளர்கள் இந்தத் தகவல்களை அனுப்பி வைப்பதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *