முப்படை இருந்தும் பயனில்லை; மீனவர்களுக்கு தேவை துப்பாக்கி: தா.பாண்டியன் பேட்டி

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_6692141295ராமநாதபுரம்: இந்தியாவில் முப்படை இருந்தும் தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என இந்திய கம்யூ., மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார். தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறுகையில், “”தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டி வருகின்றனர்.

இது வரை 400 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 300 படுகொலைகள் அடங்கும். ஏராளமானோர் ஊனமடைந்துள்ளனர். தமிழக எல்லை பகுதியை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. இதை வலியுறுத்தி நடத்தப்பட்ட எத்தனையோ போராட்டங்களை கண்டுகொள்ளவில்லை.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் போதெல்லாம் குறைந்தது 10 நாட்கள் கழித்து தான் அவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடைவெளியில் இலங்கை சிறையில் அதிக துன்பங்களை அனுபவிக்கின்றனர். சோமாலிய கடற்கொள்ளையர்களை ஒழிக்க மத்திய அரசு இந்திய கடற்படையை அனுப்ப தயாராக உள்ளது. தமிழக மீனவர்களுக்கு ஒரு பிரச்னை என்று வரும் போது கண்டு கொள்வதில்லை. இந்தியாவில் முப்படை இருந்தும் தமிழக மீனவர்களுக்கு பயன் இல்லை. தமிழக மீனவர்கள் தங்களை காத்து கொள்ள துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமம் வழங்க வேண்டும். தமிழக மீனவர்களும் சிந்திக்க துவங்கினால் விபரீதம் வேறுவிதமாக செல்லும் என்பதை மத்திய, மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *