அமெரிக்க வீரரை கைதியாக பிடித்துள்ள தலிபான்

posted in: உலகம் | 0

tblfpnnews_39188349247காபூல்: அமெரிக்க படை வீரரை கைதியாக பிடித்துள்ளதாக தலிபான் பயங்கரவாதிகள் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் . ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு அமைதி திரும்பும் வரை இந்தப்படைகள் அங்கு முகாமிட்டிருக்கும் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன. ஆப்கனில் பாதுகாப்பு படையினர் மற்றும் தூதரகம் , உள்ளிட்டவைகளை குறி வைத்து தாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் அமெரிக்க படை வீரர் ஒருவரை பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டிருப்பது படமாக்கப்பட்டுள்ளது. இதில் வரும் அந்த வீரர் அமெரிக்காவில் சன்வாலியில் பிறந்தவர். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்பட்டது. தற்போது அவர் தலிபான் பிடியில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வீடியோவில் பேசும் அந்த அமைப்பின் செய்திதொடர்பாளர் கூறுகையில் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் அமெரிக்க படையினரால் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவித்தால் நாங்கள் இந்த வீரரை விடுவிப்போம் . இன்னும் பல வீரர்களை பிடித்து செல்வோம் என கூறியுள்ளனர். இவர் ஆப்கனில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்தான் அங்கு பட்டிகா என்ற பகுதியில் இவரை பயங்கரவாதிகள் பிடித்து சென்றிருக்கலாம் என்று பாதுகாப்பு வட்டாரம் கூறியுள்ளது. இவரை பயங்கரவாதிகள் துன்புறுத்தவில்லை என்றும் நல்ல நிலையில் வீடியோவில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *