தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு வழங்கப்பட்ட கட்சியின் உப தலைவர் பதவியே எஸ்.பி திஸாநாயக்கவிற்கும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளவுள்ள எஸ்.பி திஸாநாயக்கவிற்கு அந்த கட்சியின் உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் ஜனாதிபதிக்கும், எஸ்.பி திஸாநாயக்கவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் முரளிதரனுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராகக் கடமையாற்றிய எஸ்.பி திஸாநாயக்கவிற்கு வழங்கப்பட்ட பதவி, உண்மையில் ஓர் தரக்குறைவான பதவியாகவே அரசியல் வட்டாரத்தில் நோக்கப்படுகிறது.
Leave a Reply