காட்டெருமையிடம் பாசம் காட்டும் விவசாயி

posted in: மற்றவை | 0

tblgeneralnews_20900690556கொடைக்கானல் : கொடைக்கானலில் காட்டெருமையை தன் வசப்படுத்தி, விவசாயி ஒருவர் பழகி வருகிறார். கொடைக்கானல் செண்பகனூர் வனப்பகுதி, பேரி தோட்டத் திற்கு வரும் காட்டெருமைகள் விளை நிலங்களை நாசம் செய்கின்றன. உணவு தேடி வந்த 12 வயது ஆண் எருமை காலில் அடிபட்டு, நடக்க முடியாமல் தவித்தது. இதை பார்த்த செண்பனூரை சேர்ந்த ஜான், அதற்கு உதவ முயன்றார்.

அவரிடம் எருமை, தனது வழக்கமான சுபாவத்தை காட்டியது. இருந்தும் ஜான், ஒருவாரமாக புல், காரட்டை உணவாக கொடுத்தார். எருமை தற்போது நிற்க ஆரம்பித்துள்ளது. காட்டெருமைக்கு தொடர்ந்து உணவு கொடுத்ததால், ஜானுடன் நட்பு கொண்டது.

ஜான் கூறியதாவது: காட்டெருமையின் காயம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. நான், உணவு கொடுத்த போது முதலில் திமிறியது, பின் பழகி விட்டது. இப்போது என்னை தவிர வேறு யாராவது சென்றால் ஆபத்து தான், என்றார்.

பாசம் என்பது நாய்க்கும், பறவைக்கும், பசு மாட்டிற்கு மட்டும் சொந்தமல்ல, முரட்டுத்தனத்துக்கு பெயர் போன காட்டெருமைக்கு உண்டு என்பதையே இது காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *