மக்களுக்காக கூட்டணி வைக்க விஜயகாந்த் தயாராம்!

posted in: அரசியல் | 0

வந்தவாசி: தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் நிச்சயம் கூட்டணி வைக்கத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.

இதன்மூலம், கூட்டணி வைத்தவர்களை எல்லாம் இதுவரை திட்டித் திட்டியே அரசியல் நடத்திக் கொண்டிருந்த விஜய்காந்த்தும் கூட்டணிக் குளத்தில் குதி்க்கவுள்ளார்.

வந்தவாசி இடைத் தேர்தல் தேமுதிக வேட்பாளர் ஜனார்த்தனனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அவர் பேசுகையில்,

ஜெயலலிதா 2 முறையும், கருணாநிதி 5 முறையும் ஆட்சி செய்து தமிழக மக்களுக்கு என்ன செய்து விட்டார்கள்?. ஒன்றும் செய்யவில்லை.

நம்​மு​டைய பணத்​தில்​தான் நமக்கு இல​வச கலர் டிவி தரு​கி​றார்​கள்.​ காஸ் அடுப்பு தரு​கி​றார்​கள்.​ அவர்​கள் வீட்​டுப் பணத்தை தர​வில்லை.​

கிரா​மத்​துச் சாலை​கள் குண்​டும்,​​ குழி​யு​மாக உள்​ளன.​ 62 ஆண்​டு​கால ஆட்​சி​யின் லட்​ச​ணம் இது​தான்.​

ரா​வ​ணனை காட்​டிக் கொடுத்த விபீ​ஷ​ணன் போல தமி​ழர்​களை டெல்​லிக்​குக் காட்​டிக் கொடுத்தவர் கரு​ணா​நிதி.​

தி​மு​கவை திட்​டி​னால் என் சொத்தை அழிப்​பார்​கள்.​ என் சொத்​து​கள் அனைத்​தை​யும் உங்​க​ளுக்​காக இழக்​க​வும் நான் தயா​ராக உள்​ளேன்.​

முல்​லைப் பெரி​யாறு பிரச்​சனை​யில் கரு​ணா​நிதி மத்​திய அமைச்​ச​ரைக் கண்​டித்து பொதுக்​கூட்​டம் என்று அறி​வித்​தார்.​ உடனே இளங்​கோ​வன் ஸ்பெக்ட்​ரம் ஊழ​லில் ராஜா​வைக் கண்​டித்து ஊர் ஊராக மேடை போட்டு பேசு​வேன் என்று கூறி​ய​தும் கரு​ணா​நிதி கூட்​டத்தை ரத்து செய்​தார்.​
இப்​ப​டிப்​பட்​ட​வ​ரால் மக்​க​ளுக்கு என்ன செய்​து​விட முடி​யும்?​

எம்.ஜி.ஆர் 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினார். அதனால் அப்போது யாராலும் ஆட்சிக்கு வர முடியவில்லை.

காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் அவர்களிடம் நீங்கள் உங்கள் தொகுதிக்கு சுகாதாரம், சாலை வசதி, கல்வி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என கேட்க முடியாது.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்றார்கள், வழங்கினார்களா இல்லையே. அதிமுகவும், திமுகவும் பல கட்சிகளுடன் கூட்டணி வைக்கின்றன. நான் மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளேன்.

தமிழக மக்களுக்காக நல்லது நடக்கவும், மக்களுக்காக போராடவும் நான் நிச்​ச​யம் ஏதா​வது ஒரு கட்​சி​யு​டன் கூட்​டணி வைப்​பேன்.​ ஆனால், யாருடன் கூட்டணி என்பதை இப்போது சொல்ல மாட்டேன். அப்போது விஜயகாந்தின் திறமை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் பாமக போல மாறி,​​ மாறி போக​மாட்​டேன்.​

இந்த இடைத் தேர்த​லில் தேமு​தி​க​வுக்கு வாக்​க​ளித்​தால்​தான் ஆட்சி செய்​ப​வர்​க​ளுக்கு பயம் வரும்.​ திமு​க​வி​னர் ஓட்​டுக்​காக ஒவ்​வொ​ரு​வ​ருக்​கும் ரூ.500,​ 1000 கண்​டிப்​பாக கொடுத்​தி​ருப்​பார்​கள்.​ ஆயி​ரம் பொய் சொல்லி கல்​யா​ணம் என்​பார்​கள்.​ அது​போல பணத்தை பெற்​றுக்​ கொண்டு மாற்றி வாக்​க​ளி​யுங்​கள் என்​றார்.​

சிறும்​பூண்டி என்ற இடத்​தில்,​​ எதிரே துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் பிர​சா​ரம் செய்​த​படி வந்​த​தால் போலீ​ஸார் விஜ​ய​காந்தை தடுத்ததி​னர்.​ இத​னால் சினிமா பாணியில் கண்கள் சிவக்க கோபப்​பட்ட விஜ​ய​காந்த் வேனில் இருந்து கீழே இறங்​கி நடந்​து சென்று வாக்​கு சேக​ரித்​தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *